தமிழ் சினிமா

கி​ராமத்து பின்​னணி​யில் உருவாகும் ‘அறுவடை’

செய்திப்பிரிவு

‘லா​ரா’ படத்​தைத் தொடர்ந்து எம்​.கே.ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்​கும் படம், ‘அறுவடை’. எம்​.​கார்த்​தி​கேசன் இயக்​கி, ஹீரோ​வாக நடிக்​கும் இப்​படத்​தில் நாயகி​யாக சிம்​ரன் ராஜ் நடிக்​கிறார். முக்​கிய கதா​பாத்​திரங்​களில் சரவணன், ராஜசிம்​மன், கஜராஜ், அனுப​ராமி கவி​தா, தீபா பாஸ்​கர் நடிக்​கிறார்​கள். ஆனந்த் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ரகு ஸ்ர​வண் குமார் இசை அமைத்​துள்​ளார்.

கிராமப்​புற மக்​களின் வாழ்​வியல் கலாச்​சா​ரம் மற்​றும் பண்​பாட்டை பிர​திபலிக்​கும் வகை​யில் உரு​வாகும் இப்படக் குழு​வினர், கோயம்​புத்​தூரில் பொங்​கல் விழா கொண்​டாடிப் படப்​பிடிப்பை முடித்​துள்​ளனர். இப்​படம் பற்றி இயக்​குநர் கார்த்​தி​கேயன் கூறும்​போது,

“சா​தாரண மனிதனின் வீட்​டில் நடை​பெறும் சிறிய பிரச்சினை, பெரிய சிக்​கலாக உரு​வெடுத்து சமூகத்தை எப்​படி சீரழிக்​கிறது என்​பது திரைக்​கதை. ‘வினை விதைத்​தவன் வினை அறுப்​பான்’ என்ற தத்​து​வத்தை மையப்​படுத்தி இப்​படத்​துக்கு ‘அறு​வடை’ என டைட்​டில் வைத்துள்ளோம்​” என்​றார்​.

          
SCROLL FOR NEXT