தமிழ் சினிமா

என் வசனத்தை நீக்கச் சொன்ன நடிகை! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 16

Guest Author

அப்​போது சின்ன சின்ன வேடங்​களில் நடித்து வந்​தேன். கூடவே தொடர்ந்து வாய்ப்பு தேடு​வதை வேலை​யாக வைத்​திருந்​தேன். ஆரம்​ப​கால நடிக​னுக்கு அது​வும் ஒரு வேலை​தானே. என் மேல் அசோசி​யேட் இயக்​குநர் ஒரு​வர் அக்​கறை கொண்​ட​வ​ராக இருந்​தார். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் எந்த படத்​தில் பணி​யாற்​றி​னாலும் என்னை அழைப்​பார். வாய்ப்​பு​கள் கிடைக்​கும். அதை செய்து வந்​தேன்.

அவர் முன்​னணி இயக்​குநர் ஒரு​வரின் படத்​தில் வேலை பார்த்​துக் கொண்​டிருந்த போது டப்​பிங்​கிற்கு என்னை அழைத்​திருந்​தார். அந்த இயக்​குநர் டப்​பிங் தியேட்​டருக்கு வந்​திருந்த போது அவரிடம் “எனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு வேணும்” என்று கேட்​டேன். என்னை ஒரு மாதிரி​யாகப் பார்த்​து​விட்​டு, “ஏம்​பா... நாங்​கலாம் படம் எடுத்து பொழைக்​கறது உனக்கு புடிக்​கலை​யா?” என்று கிண்டலாக கேட்​டார்.

எனக்கு அது எந்த பாதிப்​பை​யும் ஏற்​படுத்​த​வில்​லை. நான் புன்​னகைத்​த​படி நின்று கொண்​டிருந்​தேன். அப்​போது அந்த அசோசி​யேட், “அவனை பத்தி உங்​களுக்கு தெரியல. அவன் திறமை என்​னங்​கறதை நான் அளந்து வச்​சிருக்​கேன். ஒரு காலத்​துல அவன் பெரிய நடிகனா வரு​வான். அப்ப நீங்க அவன்​கிட்ட கால்​ஷீட் கேட்​கும் போது அவன் இல்​லைன்னு சொல்​லு​வான். வேணா பாருங்க” என்று சொன்​னார்.

அதற்கு பிறகு அந்த அசோசி​யேட் கால​மாகி விட்​டார். ஆனால், அவர் சொன்​னது பலித்​தது. நான் படங்​கள் மற்றும் சீரியலில் பிசி​யாக நடித்​துக் கொண்​டிருந்த போது, அந்த இயக்​குநரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்​தது. அவர் ஒரு சீரியலை இயக்​கிக் கொண்​டிருந்​தார். என்​னிடம் சம்​பிர​தாய​மாக நலம் விசா​ரித்​து​விட்​டு, தனது தொடரில் நடிக்க வேண்​டும் என்று கால்​ஷீட் கேட்​டார். அப்​போது எனக்கு நிற்​கவே நேரமில்​லை. பகல், இரவு என ஓடிக் கொண்​டிருந்​தேன். என்​னால் கால்​ஷீட் கொடுக்க முடி​யாத நிலையை சொன்​னேன். இப்​போது அவர் பழைய விஷயங்களை நினை​வுபடுத்தி பார்த்​து​விட்​டு, “அந்த அசோசி​யேட் சொன்ன மாதிரியே, இப்ப நீ பிசி​யா​யிட்​டே, வாழ்த்​துக்​கள்” என்று சொல்லி விட்டு போனை வைத்​தார்.

அதே போல டப்​பிங் பட வசனகர்த்தா ஒரு​வர் இருந்​தார். பெயர் வேண்​டாம். நான் ஒரு படத்​துக்கு டப்​பிங் பேசிக் கொண்​டிருக்​கும்​போது, இப்​படித்​தான் இந்த மாடுலேஷனில் தான் பேச வேண்​டும் என்று பேசிக் கொண்​டிருந்​தேன். அவர், “நீங்க பேசறது சரி​யில்​லை. வேற மாதிரி, நான் சொல்ற மாதிரி வரணும்” என்​றார். நான் அந்த காட்​சியை பார்த்​து​விட்​டு, “இல்ல சார், இதுக்கு இந்த மாடுலேஷன்​தான் சரியா வரும். எனக்கு தெரிந்த அனுபவத்​தில் சொல்​றேன், இது​தான் சரி” என்​றேன். அவருக்கு ஜிவ்​வென்று கோபம் தலைக்​கேறியது.

“இல்ல, நான் சொல்​றது​தான் சரி. அது மாதிரி பேச உனக்கு வராது​யா, வரவே வராது” என்​றார். நான் சொன்​னதை அவரால் ஏற்​க​முடிய​வில்​லை. இதனால் அந்த வாய்ப்பை எனக்கு கொடுக்​க​வில்​லை. சரி என்று நானும் வந்து விட்டேன். அதை நான் சவாலாக​வும் எடுத்​துக் கொண்டேன்.

அதற்கு பிறகு சில வருடங்​கள் கழித்து சென்னை வர்த்தக மையத்​தில் நடந்த விழா ஒன்​றுக்​காக சென்​றிருந்​தேன். அவர் என் கையை பிடித்​துக் கொண்​டு, “நல்லா நடிக்கிறீங்க பாஸ்​கர். அரு​மை​யான நடிப்​பு. நீங்க டப்​பிங் பேசும் போதே பிர​மாதமா நடிப்​பீங்​கன்னு உங்​களை சரியா கணிச்​சேன்” என்​றார். அப்​போது அவர் ஏற்​கெனவே என்​னிடம் சொன்ன வார்த்தை மனதுக்​குள் வந்து நின்​றது. நான் சிரித்​துக் கொண்​டே, “நன்றி ஐயா” என்​றேன்.

இதே போல பலர் என்னை அவமானப்​படுத்தி இருக்கிறார்கள். அவர்​கள் சொன்​னார்​கள் என்​ப​தற்​காக நான் சோர்ந்து போன​தில்​லை. என்​னால் ஜெயிக்க முடி​யும் என்ற உந்​துதல் எனக்​குள் இருந்து என்னை தூண்​டிக் கொண்டே இருந்​தது. அது​தான் என்னை தேசிய விருது​வரை கொண்டு வந்து நிறுத்தி இருக்​கிறது.

நான் ஒரு சீரியலில் நடிக்​கும்​போது ஒரு புகழ் பெற்ற நடிகை அதில் நடித்​தார். அவர் வேற்று மொழியை தாய்​மொழி​யாகக் கொண்​ட​வர். அவர் ஷூட்​டிங்​கில் நான் பேசிய வசனத்​தைக் கேட்டு “நீங்க இப்​படி பேசக்​கூ​டாது, வேற மாதிரி பேசணும்” என்​றார். “நீங்க சொல்​றது, உங்க தாய்​மொழிக்கு சரியா வரும். இது தமிழுக்கு அவ்ளோ சரியா வராது” என்​றேன்.

அவர், என்னை முறைத்​து, “அப்ப என்ன விட உங்​களுக்​குத் தமிழ் நல்லா தெரி​யு​மா?” என்று கேட்​டார். “தெரி​யும்ன்​னு​தான் சொல்​றாங்​க... பரவா​யில்ல. நான் என் மாடுலேஷன்ல பேசறேன். நீங்க உங்க மாடுலேஷன்ல பேசுங்க” என்​றேன். ஸ்கிரிப்ட் என்ன மாதிரி கான்​செப்ட் என்​பதை தெரிந்து கொண்டு என் ஸ்டைலில் பேசுவது​தான் என் வழக்​கம். பிறகு, “நீங்க பேசறது இந்த எபிஸோட்ல வராது” என்​றார். நான், “எங்​கிட்ட ஏன் அதை சொல்​றீங்​க?” என்​றேன்.

“நான் சொன்ன மாதிரி நீங்க பேசலை. நான் டப்​பிங் பேசுனா​தான் இது வரும்” என்​றார். “சரிம்​மா, அது இயக்​குநர், தயாரிப்​பாளர் கவலைப்பட வேண்​டிய விஷ​யம். நான் எதுக்கு அதுல தலை​யிடப்​போறேன்? இந்த சீன் இருக்குங்​கற​தால​தான் என்னை டப்​பிங் பேசக் கூப்பிட்டிருக்​காங்க. மற்​றபடி அது வருது, வரலைங்​கறதுல எனக்​குப் பிரச்​சினை இல்​லை” என்​றேன். கூட​வே, “அது ஒரு முக்​கிய​மான காட்​சி.

கண்​டிப்​பாக இது வரதுக்கு வாய்ப்​பிருக்​கு” என்​றும் சொன்னேன். “எங்​கிட்ட சவால் விடறீங்​களா?” என்று கேட்டார். “இல்ல, நம்​பிக்​கையோட சொல்​றேன், சவால்னு எடுத்​துக்​கிட்டா எடுத்​துக்​குங்க” என்​றேன். டப்​பிங்​கிற்கு அசோசி​யேட் டைரக்​டர் வந்​தார். அவரிடம், “பாஸ்​கர் பேசிய டயலாக் எல்​லாம் கட் பண்​ணிட்டு என்னை கூப்பிடுங்க. நான் பேசறேன்” என்று சொன்​னார்.

பிறகு இப்​பிரச்​சினை இயக்​குநரிடம் சென்​றது. அவர் போன் செய்​து, “மேடம் உங்​களுக்கு என்ன சிக்​கல்?” என்று கேட்​டார். என் வசனங்​களை நீக்​கச் சொன்​னார் நடிகை. டைரக்​டர் இதுபற்றி தயாரிப்​பாளரிடம் சொன்​னார். அவர், அந்த நடிகைக்கு போன் பண்​ணி, “என்​னம்மா பிரச்​சினை?” என்று கேட்​டார். “பாஸ்​கர் பேசி​யது சரி​யில்​லை, அது அப்படி பேசக்​கூ​டாது. அது மட்​டுமில்​லாம, ஸ்கிரிப்ட்ல இருக்​கறதையே அவர் பேசலை. சொந்​தமா பேசியிருக்காரு” என்​றார். “அப்​படிப் பேசணும்னு சொல்லித்​தான் அவரை நாங்க புக் பண்​ணி​யிருக்​கோம். அவரு இயல்பா பேசுறது எல்​லாருக்​கும் புடிச்​சுருக்​கு. அப்​படி​தான் பேசணும் அவர்” என்​றார்.

“அதெல்​லாம் இல்ல. அவர் டயலாக்கை கட் பண்ண சொல்லுங்க” என்று அடம் பிடித்​தார். பிறகு தயாரிப்​பாளர், “இல்​லம்​மா, அதை கட் பண்ண முடி​யாது. நீங்க முடிஞ்சா பேசுங்க, இல்​லை​னா, இவருக்கு பதில் இவர்னு உங்களுக்கு பதிலா வேற ஒருத்​தரை போட்​டுக்​குறோம்” என்​றார். அதற்கு பிறகு​தான் அவர் போய் டப்​பிங் பேசி​விட்டு வந்​தார். பிறகு அதே படப்​பிடிப்​பில் அந்த நடிகையை சந்​தித்த போது, நான் வழக்​கம் போல வணக்கம் என்​றேன். அவர், “உங்க வணக்​கத்​துல ஒரு எகத்​தாளம் தெரி​யுது. சவால்ல ஜெயிச்​சிட்​டீங்​கன்னு நினைப்பா?” என்​றார். “நான் அப்​படி நினைக்​கலை, உங்களை விரோ​தி​யாக​வும் பார்க்​கலை, வாங்க வேலையை பார்ப்​போம்” என்​றேன்.

இதே போல பல பேர் நிறைய சவால்​களை எனக்கு கொடுத்திருக்​கிறார்​கள். அதை எல்​லாம் என் தன்​னம்​பிக்​கை​யாலும் திறமை​யாலும், இறையருளாலும் சமாளித்​திருக்கிறேன். ஒரு முறை ஜோசி​யர் ஒரு​வர், “உனக்கெல்லாம் இரும்பு தொழில்​தான் சரியா வரும். சினிமாவுல நீ பெருசா வர்​றதுக்கு வாய்ப்பே இல்​லை” என்றார். அவர் சொன்​னதை பொய்​யாக்​கு​வோம் என்​றே கடுமை​யாகப்​ போ​ராடினேன்​.

இப்​போது இந்​த இடத்​துக்​கு வந்​திருக்​கிறேன்​. அதுக்​கு பிறகு அந்​த ஜோசி​யரை நான்​ சந்​திக்​கவே இல்​லை.

(திங்கள்​தோறும்​ பேசுவோம்...)

SCROLL FOR NEXT