துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கரண் இயக்குநராக அறிமுகமாகும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பூஜை முடிந்து, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது துருவ் விக்ரம் உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மகான்’ படத்துக்குப் பிறகு சந்தோஷ் நாராயணன் இசையில் நடிக்கவுள்ளார் துருவ் விக்ரம். இதில் ப்ருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் துருவ் விக்ரம் உடன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
இப்படத்துக்கு முன்பாக ஒப்பந்தமான படத்தினை முடிக்க வேண்டும் என்று துருவ் விக்ரம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன், கரண் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.