தமிழ் சினிமா

நம்​பிக்கை தந்​தது ‘பரிமளா அண்ட் கோ’ - நடிகை ஊர்வசி மகிழ்ச்சி

நிலா

‘தலை​வன் தலை​வி’ படத்​துக்​குப் பிறகு பாண்​டி​ராஜ் இயக்​கி​யுள்ள படம் ‘பரிமளா அண்ட் கோ’. ஜெயராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்டி உள்பட பலர் நடித்துள்​ளனர். யோகி​பாபு, மிஷ்கின், சிங்​கம்​புலி ஆகியோ​ரும் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

லைகா புரொட க் ஷன்ஸ் சார்​பில் சுபாஸ்​கரன், தமிழ்க்​குமரன் புரொடக் ஷன்ஸ் மற்​றும் பசங்க புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் படம் பற்றி நடிகை ஊர்​வசி கூறிய​தாவது: சில நேரங்​களில் மட்​டுமே, ‘இந்த கதை​தான் உண்​மை​யான ஹீரோ’ என்று நம்​பிக்கை தரும் படங்​கள் அமை​யும். இந்த கதையை கேட்ட தருணத்​திலேயே அந்த நம்​பிக்கை வந்​து​விட்​டது. முழு திரைக்​கதையை​யும் கேட்ட பிறகு, இன்​னும் விரி​வாகக் கேட்க வேண்​டும் என்ற ஆர்​வம் ஏற்​பட்​டது.

பிறகு இந்​தப் படத்​தின் மீது இன்​னும் அதி​க​மான மகிழ்ச்​சி​யும் நம்​பிக்​கை​யும் வந்​தது. அதி​லும் ஜெய​ராம் நடிக்​கிறார் என்​றதும் மிக​வும் மகிழ்ந்​தேன். நாங்​கள் 25 படங்​களுக்கு மேல் சேர்ந்து நடித்​துள்​ளோம். ஆனால், கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக சேர்ந்து படம் செய்​ய​வில்​லை. இந்த கதை இரு​வருக்​கும் ஒரே நேரத்​தில் பிடித்​தது. காரணம், இது உண்​மை​யான வாழ்க்கை உணர்​வு​களோடும், இயல்​பான நகைச்​சுவையோடும் சொல்​லப்​பட்ட கதை.

‘பசங்க’ படத்​திலிருந்து பாண்​டி​ராஜ் இயக்​கிய படங்​களைப் பார்த்​திருக்​கிறேன். ஒரு கதையை வடிவ​மைப்​பதற்கு அவர் மிக​வும் நேரம் எடுத்​துக்​கொள்​வார். ஆனால் படப்​பிடிப்​பில் அவர் வேகம் வேற லெவல். மலை​யாள சினி​மா​வில் குறைந்த நாட்​களில் தரமான படங்​களை எடுப்​பார்​கள் என்று சொல்​வார்​கள். சமீபத்​தில் நான் வேலை செய்த படங்​களில் வேக​மாக முடிக்​கப்​பட்ட படம் இது​தான். இவ்​வாறு ஊர்​வசி கூறி​னார்.

SCROLL FOR NEXT