தமிழ் சினிமா

பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி

செய்திப்பிரிவு

‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர். யோகி​பாபு, மிஷ்கின், சிங்​கம்​புலி ஆகியோ​ரும் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சுபாஸ்​கரன், தமிழ்க்​குமரன் புரொடக்‌ஷன்ஸ் மற்​றும் பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்​கின்​றன. ஜார்ஜ் சி.​வில்​லி​யம்ஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

“இப்​படத்​தின் கதை, வித்​தி​யாச​மான குடும்​பத்​தைச் சுற்றி நகர்​கிறது. அந்த குடும்​பத்​தில் உள்ள மனிதர்​களின் தனித்​து​வ​மான குணா​திச​யங்​கள் மற்​றும் அவர்​கள் சந்​திக்​கும் அபூர்​வ​மான சம்​பவங்​கள் கதை​யின் மையம். சென்​னை​யில் தொடங்​கி, கோவை, பாலக்​காடு வரை பயணிக்​கும் இந்த கதை, த்ரில்​லர் பாணி​யிலும் நகைச்​சுவை கலந்​தும் உரு​வாகி​யுள்​ளது” என்​றது படக்​குழு.

SCROLL FOR NEXT