தமிழ் சினிமா

நான் பார்த்த திலகங்கள்​... - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 29

Guest Author

எனக்கு பத்​து, பதினோறு வயதிருக்​கும் அப்​போது. ஐந்​தாவதோ, ஆறாவதோ படித்​துக்​கொண்​டிருந்​தேன். மக்​கள்​தில​கம் எம்​.ஜி.ஆர் எங்​கள் ஊரான நாகப்​பட்​டினத்​துக்கு வரு​கிறார் என்று ஒரு வார​மாகவே பேச்​சாக இருந்​தது.

ஊரில் எங்கு சென்​றாலும் அது​தான் பேச்​சு. அவர் அப்​படி இருப்​பார், இப்​படி இருப்​பார் என்று ஒவ்​வொரு​வரும் அவரைப்​பற்றி கற்​பனை​யாக சொல்​லிக்​கொண்​டிருப்​பார்​கள். அவருடைய கட்​டுமஸ்​தான உடல், கவர்ச்​சி​யான தோற்​றம் என எல்​லா​வற்​றை​யும் படங்​களில் பார்த்​திருக்​கிறோம்.

அதனால் நேரில் பார்க்க எல்​லோரும் துடித்​துக்​கொண்டு இருந்​தோம்! ‘சொன்ன தேதி​யன்று வந்து விட்​டார் மக்​கள் தில​கம் எம்​.ஜி.ஆர். நாகப்​பட்​டினத்​தில் அப்​போது அவுரித்​திடல் என்ற ஒன்று உண்​டு. இப்​போது அது பேருந்து நிறுத்​த​மாக மாறி இருக்​கிறது. மொத்​த​மாக அடித்து பிடித்து கூட்​டம் கூடி​விட்​டது அந்த இடத்​தில்.

எங்​கும் மனித தலைகள். அப்​படி ஒரு கூட்​டத்தை அதற்கு முன் நான் பார்த்​த​தில்​லை. எம்​.ஜி.ஆரை பார்க்​கும் ஆர்​வத்​தில் நானும் நெரிசலில் முண்​டி​யத்து மேடைக்கு அரு​கில் செல்ல முயன்​றேன். முடிய​வில்​லை. பிறகு ஒரு ஓரத்​தில் நின்​று​கொண்​டேன்.

அவர் பளிச்​சென தெரிந்​தார். பார்த்​துக்​கொண்டே இருக்​கலாம் என்​ப​தான தோற்​றம். தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக வந்​திருந்த அவர், மேடை​யில் ஏறி​னார். வெள்ளை வேஷ்டி, டைட்​டான சட்​டை, வெள்ளை தொப்​பி, கருப்​புக் கண்​ணாடி என புகைப்​படங்​களில் பார்த்த எம்​.ஜி.ஆர் நேரிலும் அப்​படியே இருந்​தார்.

அவரைப் பார்த்​ததுமே ஏதோ விவரிக்க முடி​யாத உணர்வு ஒன்று உடலுக்​குள் ஊடுரு​வுவதை உணர்ந்​தேன். அது ஒரு சிலிர்ப்​பான அனுபவம். அப்​போது 25 வயது இளைஞர் ஒரு​வர் பேசு​வார் என்று அறி​வித்​ததும் எம்​.ஜி.ஆரின் முன் அந்த இளைஞர் மைக்கை பிடித்​தார்.

அவரால் பேச முடிய​வில்​லை. எம்​.ஜி.ஆரை அரு​கில் கண்ட ஆனந்​தத்​தில் அவருக்​குப் பேச்சே வரவில்​லை. எம்​.ஜி.ஆர் அதை ரசித்​த​படி சிரித்​துக்​கொண்டே இருந்​தார். பிறகு அவரைத் தட்​டிக்​கொடுத்து விட்டு பேசி​னார். என்ன பேசி​னார் என்று ஞாபகமில்​லை. பேசி முடித்து விட்டு கிளம்​பி​விட்​டார். அவர் கார் பின்​னாலேயே பெரும் கூட்​டம் ஓடியது.

அவரை பார்த்த பிரமை​யிலேயே எல்​லோரும் இருந்​தோம். எம்​.ஜி.ஆரை பார்த்து விட்​டோம் என்​பதே எங்​களுக்கு பெரும் மகிழ்ச்​சி​யாக இருந்​தது.

அதில் இருந்து மீள்​வதற்​குள் மறு​நாள் அதே மேடை​யில் நடிகர் தில​கம் சிவாஜி வரு​கிறார் என்று தகவல்.

ஸ்கூலை முடித்​து​விட்டு அவரைப் பார்க்க ஓடி வந்​து​விட்​டேன். அவரும் காங்​கிரஸ் கட்சி பிரச்​சா​ரத்​துக்​காக வந்​திருந்​தார். அவரைப் பார்க்​க​வும் சரி​யான கூட்​டம். கூட்​டத்​தில் முண்​டியடித்து நானும் போய் நின்​றேன். அவர் பேச்​சைக் கேட்​டோம். எல்​லோருக்​கும் சுற்றி கை காட்​டிக்​கொண்டே சென்​றார்.

அவரை​யும் பார்த்​து​விட்​டேன். இதற்கு பிறகு எம்​.ஜி.ஆரை நெருக்​கத்​தில் பார்த்​தது, சென்​னை​யில் டி.கே.சண்​முகம் அண்​ணாச்​சி​யின் மணி​விழா​வில். அந்த விழா​வில் மிக​வும் நெருக்​கத்​தில் எம்​.ஜி.ஆரைப் பார்த்​தேன். அதற்கு பிறகும் சில முறை நெருக்​க​மாகப் பார்த்​திருக்​கிறேன்.

அப்​போது அவர் முதலமைச்​ச​ராக இருந்​தார். சின்​ன​போரூரில் நாங்​கள் குடி​யிருந்​த​போது, ஒரு பிரச்​சினைக்​காக ராமாவரம் தோட்​டத்​தில் அவரைச் சந்​தித்து ஒரு மனு கொடுக்க எல்​லோரும் சென்ற போது நானும் சென்று பார்த்​தேன்.

பிறகு நான் ஒரு பற்​பசை நிறு​வனத்​தில் வேலை பார்த்​த​போது அவரை சாலை​யில் பார்க்​கும் வாய்ப்பு கிடைக்​கும். அவர் கார் போகும்​போது எல்​லோரும் அவர் காருக்கு கை அசைப்​பார்​கள். அவர் காரின் கருப்​புக் கண்​ணாடியை​யும் மீறி உள்​ளிருந்து அவர் கை காட்​டு​வது வெளியே தெரி​யும்.

அப்​படிப் பார்த்​திருக்​கிறேன். அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு இப்​பிறப்​பில் எனக்கு கிடைக்​க​வில்​லை. சிவாஜி அப்​பாவை, ஸ்ரீதரின் ‘வைர நெஞ்​சம்’ படத்​தின் படப்​பிடிப்​பில் பார்த்​தேன். அதில் அசிஸ்​டென்ட் டைரக்​ட​ராக வேலை பார்த்த ஒரு​வர் படப்​பிடிப்​புக்கு அழைத்​துச் சென்​றார். அப்​போது பார்த்​தேன் என்​றாலும் பேச முடிய​வில்​லை. அவரிடம் பேசிப் புகைப்​படம் எடுத்​துக்​கொண்​டது, ‘தேவர் மகன்’ படத்​தின் டப்​பிங்​கில்​தான்.

இப்​படி இரண்டு தில​கங்​களை​யும் தரிசித்​து​விட்​டேன். அடுத்​த​தாக நான் சந்​தித்து தரிசித்து அவர்​கள் கையாலேயே உணவு பரி​மாறி சாப்​பிட வைத்த இன்​னொரு தில​கம், நடிகையர் தில​கம் சாவித்​திரி அம்​மா! அப்​போது அவர் ஒரு நாடகம் போட்​டார். அதன் பெயர் இப்​போது நினை​வில்​லை. அதில் என் சகோ​தரி ஹேம​மாலினி நடித்​தார்.

அபிபுல்லா சாலை​யில் உள்ள எஸ்​.ஜி.எஸ் சபா அரு​கில்​தான் அவர் வீடு இருந்​தது. அக்கா​வுடன் நான் செல்​லும் போது, “டேய் பாஸ்​க​ரா” என்று வாஞ்​சை​யாகக் கூப்​பிடு​வார். அப்​போது என்னை உட்​கார வைத்​து, “சாப்​பிடுறா, நல்லா சாப்​பிடுறா...” என்று பரி​மாறி இருக்​கிறார். நான் அவர் கையால் சாப்​பிட்​டிருக்​கிறேன்.

அந்​தளவுக்கு இந்த மூன்று தில​கங்​களைச் சந்​தித்த பாக்​கி​யம் இந்​தப் பிறப்​பில் எனக்கு கிடைத்​ததை பெரு​மை​யாக உணர்​கிறேன். இன்​றைக்​கும் படப்​பிடிப்​பு​களுக்கு தாமத​மாகச் செல்​லாமல் தொழிலை சரி​யாக செய்ய வேண்​டும் என்று அவர்​களைத் தொழுது​தான் பின்​பற்​றுகிறேன்.

(திங்​கள் தோறும் பேசுவோம்​)

SCROLL FOR NEXT