தமிழ் சினிமா

என் தம்பி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 30

Guest Author

நான் பிறந்​தது 1957-ம் ஆண்​டு. இப்​போது எனக்கு 68 வயது முடிவடைந்து விட்​டது. எனக்கு அடுத்​த​தாக 1960-ல் தம்பி பிறந்​தான். சிறு​வய​தில் இருந்தே நாங்​கள் நண்​பர்​களை போல பழகு​வோம். ஒன்​றாக விளை​யாடு​வோம். குழந்​தைகளுக்கே உண்​டான சண்​டைகள் செய்து கொள்​வது, பிறகு சேர்ந்து கொள்​வது என இருப்​போம்.

அவனுக்​குப்​பிறகு 2 தம்​பிகள் பிறந்​தனர். ஒரு தம்பி பிறந்த 3 வது நாளில் இறந்​து​போ​னார். இன்​னொரு தம்பி அவருடைய 10 வயதில் உடல் நலமில்​லாமல் இறந்து விட்​டார். என் உடன் பிறந்​தோர் எத்​தனை பேர் என்​றால், மூத்த அக்​கா, ஹேம​மாலினி, இரண்​டாவது சகோ​தரி தாரா சந்​துரு, (மும்​பை​யில் இருக்​கிறார்.) மூன்​றாவது நான், நான்​காவது என்​னுடைய தம்​பி, இறந்த இரு​வரை​யும் சேர்த்து ஆறு பேர்.

ஏதோ ஒரு நாவலை படித்​து​விட்டு தம்​பிக்கு கிரிதரன் என்று பெயர் வைத்​தார்​கள் என் பெற்​றோர். அவன் நல்ல சுருட்​டை​முடி​யுடன் பூசிய உடலுடன் இருப்​பான். நான் மெலிந்த உரு​வம்​தான். நான் படிப்​பில் சிறந்த மாணவன் இல்​லை. அவன் நன்​றாகப் படிப்​பான்.

சின்ன வயதில் அவனை யாராவது தூக்கி வைத்​திருந்​தால், அவர்​கள் முதுகில் தாளம் போடு​வான். அப்​போது யாரோ, இவனுக்கு மிருதங்​கம் வாசிக்க கற்​றுக்​கொடுத்​தால் நன்​றாக வரு​வான் என்று சொன்​னார்​கள்.

அதனால் அவனுக்கு ஓர் ஆசிரியரை வைத்து கற்​றுக் கொடுத்​தார்​கள். பிர​மாத​மாக மிருதங்​கம் வாசிப்​பான். 10 வயதிலேயே அவனை ஒரு கச்​சேரி​யில் வாசிக்க வைத்​து, பாலநந்தி என்று பட்​டம் கொடுத்​தார்​கள். எந்​தளவுக்​குத் திறமை​யாக மிருதங்​கம் வாசிப்​பானோ, அந்த அளவுக்கு படிப்​பிலும் கெட்​டிக்​காரன். நாங்​கள் ஒன்​றாக வளர்ந்​தோம்.

எனக்​கும் என் சகோ​தரி​கள் இரு​வருக்​கும் வாய்ப்​பாட்டு சொல்​லிக் கொடுத்​தார்​கள். சிக்​கல் என்ற ஊரில் இருந்து கந்​த​சாமி என்று ஓர் ஆசிரியரும் திரு​மெய்​ஞானம் என்ற ஊரில் இருந்து நாராயண​சாமி என்ற ஆசிரியரும் வந்து பாட்டு சொல்​லிக் கொடுத்​தார்​கள். அப்​படி வளர்ந்​தோம். பிறகு அங்​கிருந்து சென்னை வந்​ததை நான் ஏற்​கெனவே சொல்​லி​யிருக்​கிறேன்.

சென்​னை​யில் கோபாலபுரம் ஆண்​கள் மேல் நிலைப்​பள்​ளி​யில் படித்​தோம். அவன் ஒரு வகுப்​பில் கூட பெயில் ஆனதில்​லை. (நான் எஸ்​.எஸ்​.எல்​.சி​யில் 3 முறை பெயில் ஆகி தேர்​வானேன் என்​பதை தயவு செய்து என்​னோடு படித்த நண்​பர்​கள் யாரும் வெளியே சொல்ல வேண்​டாம் சிறு​வய​திலேயே நடிப்பு ஆசை வந்து விட்​ட​தால் படிப்​பில் என் கவனம் இல்​லை.

இதில் பெரிய கூத்து என்​னவென்​றால் நான் டிகிரி படிக்​கும் போது அவனும் டிகிரி படித்​தான். நான் பச்​சையப்​பன் கல்​லூரி​யிலும் என் தம்பி புதுக்​கல்​லூரி​யிலும் படித்​தோம். பிறகு அவன் அரசு வேலைக்​கான தேர்​வு​களை எழு​தி​னான்.

அப்​போது எம்​.எல்.ஏ ஹாஸ்​டலில் டெலி​போன் ஆபரேட்​டர் பணி​யிடம் காலி​யாக இருக்​கிறது என்று தெரிந்து அவன் என் தந்​தை​யாரிடம் சொல்ல, அந்த வேலைக்​காக என் தந்தை அப்​போதைய அமைச்​சர் நாவலர் நெடுஞ்​செழியனை பார்க்க அவனை அழைத்​துச்​சென்​றார்.

அம்மா சத்யபாமாவுடன் நானும் தம்பி கிரிதரனும்.

நானும் போனேன். அமைச்​சரய்யா என் அப்​பாவுக்கு நல்ல பழக்​கம். காரில் ஏறப்​போனவர் அப்​பாவை பார்த்​ததும் “என்​னண்ணே நீங்க வந்​திருக்​கீங்​க?” என்று கேட்​டார். “இல்​லை... பையன் வேலை விஷயமா உங்​களை பார்க்க வந்​தேன்” என்று சொன்​னார் அப்​பா! அமைச்​சர் என்ன என்று கேட்​டுக்​கொண்டு பிறகு, “நீங்க போங்​கண்​ணே... நான் பார்த்​துக்​கறேன்” என்​றார்.

மறு​நாளே வேலைக்​கான ஆர்​டர் வந்து விட்​டது!/தம்பி வேலைக்கு சேர்ந்து விட்​டான்! நானும் தள்​ளாடி தடு​மாறி டிகிரி முடித்து ஒரு பற்​பசை நிறு​வனத்​தில் வேலைக்கு சேர்ந்து விட்​டேன். இதற்​கிடையே ஓரிரு வருடங்​களில் நான் அந்த வேலை​யை​யும் விட்டு விட்டு சினி​மாத்​துறைக்கு வந்து விட்​டேன்.

பிறகு தம்பி அரசு கொற​டா​விடம் பி.ஏ.​வாக சேர்ந்​தான். மிகத்​திறமை​யான நிர்​வாகி அவன். அதனால் அவர் அனைத்து பொறுப்​பு​களை​யும் கிரி... கிரி என்று அவனிடமே ஒப்​படைப்​பார். பிறகு, ‘அசிஸ்​டென்ட் செக் ஷன் ஆபிஸர்’ ஆனான்.

அவனுக்கு திரு​மணம் ஆனது. சவுந்​தர்​யா, கிருத்​திகா என இரண்டு பெண் குழந்​தைகள் பிறந்​தார்​கள். அவன் வாழ்க்கை சுக​மாக போய்க்​கொண்​டிருக்​கும் போது, எப்​படியோ மது குடிக்க பழகி விட்​டான். அதனால் மிருதங்​கம் வாசிப்​பதை விட்​டான். இந்த தீய பழக்​கத்​தால் அவன் உடல் நிலை பாதிக்​கப்​பட்​டது.

“இரண்டு பெண் குழந்​தைகள் இருக்​கு, குடியை விட்டு விடு” என்று அறி​வுரை சொல்​வேன். “சரி, இனி விட்டு விடு​கிறேன்”. என்​பான். பிறகு கால மாற்​றத்​தால் சின்​னப்​போரூர் வீட்டை விற்று பாகம் பிரித்த பின் நான் விரு​கம்​பாக்​கம் போய் விட்​டேன். அவன் போரூர் அருகே உள்ள காரம்​பாக்​கம் போனான்.

பிறகு அவனை எப்​போ​தாவது​தான் சந்​திக்​கும் வாய்ப்பு கிடைக்​கும். ஒரு கட்​டத்​தில் மதுவை விடவே முடி​யாத சூழ்​நிலைக்கு சென்று விட்​டான். நான், என் மனை​வி, அவன் மனைவி ஞானசவுந்​தரி, (ஜானு என்று அழைப்​போம்) குழந்​தைகள் என எல்​லோரும் சொல்​லிப்​பார்த்​தோம்! எவ்​வளவு முயன்​றும் அவனால் அப்​பழக்​கத்தை விட முடிய​வில்​லை.

இதை விதி என்று மனதை தேற்​றிக்​கொள்​வதை தவிர வேறு வழி​யில்​லை! அந்த ஒன்​றைத் தவிர்த்து பார்த்​தால் என் தம்பி என்​னிலும் சிறந்​தவன், சிறந்த அறி​வாளி. பிறகு, ‘8 தோட்​டாக்​கள்’ பட ஷூட்​டிங்​கில் நான் இருந்​த​போது, ஹேமா அக்கா போன் செய்​தார். அவனை மருத்​து​வ​மனை​யில் சேர்த்​திருப்​ப​தாகச் சொன்​னார்.

மருத்​து​வர்​கள், ‘இனி மதுவை தொடவே கூடாது’ என்று சொன்​னார்​கள். அவன் டிஸ்​சார்ஜ் ஆகி மருத்​து​வ​மனை​யில் இருந்து வீட்​டுக்கு வந்த இரண்​டாவது நாள், அதாவது, 2016-ம் ஆண்டு செப்​.27 ம் தேதி இரவு சுமார் 10.30 மணி​யள​வில் அயர்ந்து உறங்​கிக்​கொண்​டிருந்த என்னை என் மனைவி அழுத​வாறே எழுப்​பி​னார். “கிரி மாமா, கிரி மாமா” என்று திக்​கித்​திணறி பேச்சு வராமல் தவித்​தாள்.

நான் எழுந்து உட்​கார்ந்​து, “என்​ன... இறந்​துட்​டா​னா?” என்று கேட்​டேன். எனக்கு வேதனை இருந்​தா​லும் அதிர்ச்சி இல்​லை! ஏனென்​றால் முடிவு இது​தானே? மரணம் இயற்​கை. அதை ஏற்​றுக்​கொண்​டு​தான் ஆக வேண்​டும். (மற்​றவர்​கள் மரணம் நமக்கு வேதனை, நம்​முடைய மரணம் இப்​பிறப்​பிலிருந்து விடு​தலை.) மறு​நாள் போரூர் மின் மயானத்​தில் தகனம் செய்து விட்டு வந்​தேன்.

துக்​கம் தாங்க முடி​யாமல், தம்பி பற்றி இரண்டு கவிதைகள் எழு​தினேன். ‘உப்பை நீ குறைத்​திருந்​தால் உதிரக்​கொ​திப்பு குறைந்​திருக்​கும் தப்பை நீ தவிர்த்​திருந்​தால் தலை​யெழுத்து மாறி​யிருக்​கும் தப்​பையே துணை​யாய்க்​கொண்டு தறிகெட்​டுப்​போ​னாய் நீ.

அரசு வேலை கிட்​டியதென அகலக்​கால் வைத்​திட்​டாய், அதனாலே அமைதி கெட்டு அஸ்​தி​யா​யும் கரைந்​திட்​டாய் மரணத்​தில்​தான் அடங்​கியதோ உன் மது​வருந்​தும் தாகம் இப்​பிறப்​பில் செய்​திட்ட இச்​செயல் போல் ஏது​மின்றி வரும் பிறப்​பில் வறியோர்க்​களித்து வள்​ளலாய் வாழ்ந்​திட​டா..!’ என்று எழு​தினேன்.

அடுத்​து, ‘முன்னே வந்த இரண்டு இறப்​பும் இறைவனின் சதி. பின்னே வந்த உனது இறப்போ நீயே வகுத்த விதி. வகுப்​பெ​தி​லும் நீ தோற்​க​வில்​லை. வாழ்க்​கை​யில் நீ ஜெயிக்​க​வில்​லை.. மனைவி மக்​களை மதிக்​காமல் மது​வையே மதித்​த​தால் மரண​வா​யிலை மிதித்​தாய்.

எனக்​கும் ஓர் நாள் உண்​டென்​றாலும் என் மனம் இன்று தவிக்​குத​டா. ஊரில் ஆயிரம் தம்​பிகள் இருப்​பினும் உடன்​பிறந்​தோன் கூடாதென்​பது என் வி​தி​யோ?’ என்​றும் எழு​தினேன். ‘ஆண்​டாண்டு காலம் அழுது புரண்​டாலும்​ மாண்​டார்​ வரு​வரோ மண்​ மீதே’ என்​பது எத்​தனை உண்​மை! இனி எப்​பிறப்​பில்​ நாங்​கள்​ ஒரு தாய்க்​கு பிள்​ளைகளாக பிறப்​போம்​ என்​று தெரியவில்​லை.

(திங்கள்தோறும் பேசுவோம்)

SCROLL FOR NEXT