நடிகை சமந்தா

 
தமிழ் சினிமா

“மன வலிமையைத் தருகிறது தாய்மை அனுபவம்!” - சமந்தா நெகிழ்ச்சி

நிலா

நடிகை சமந்தா நடித்த ‘எங்​கள் தங்​கம்’ திரைப்​படம் தமிழ், தெலுங்​கில் கடந்த ஜூன் மாதம் வெளி​யானது. இப்​படம் ரூ.100 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்​தது. இந்​நிலை​யில் இயக்​குநர் ராஜ் நிடிமோருவை திரு​மணம் செய்​து​கொண்ட அவர், தான் தாய்மை அடைந்​திருப்​பதை அண்​மை​யில் அறி​வித்​திருந்​தார்.

இதற்கிடையே அவர் உடற்​ப​யிற்சி செய்​யும் வீடியோவை பகிர்ந்திருந்த அவர், வெள்​ளிக் கிழமை ரசிகர்​களின் கேள்விகளுக்​குத் தனது சமூக வலை​தளப்​பக்​கத்​தில் பதிலளித்தார். பல ரசிகர்​கள் அவர் தாய்மை அடைந்​திருப்​பது பற்றியே கேட்​டனர்.

அப்​போது அவர் கூறும்​போது, “தற்​போது தாய்மை அடைந்திருக்கும் காலத்தை முழு​மை​யாக அனுபவித்து வருகிறேன். இது​வரை 11 கிலோ எடை அதி​கரித்​துள்​ளேன். இந்த அனுபவம் தனக்கு எதிர்பா​ராத வித​மாக, வலிமை​யை​யும் அதிகார உணர்​வை​யும் தருகிறது. நான் இவ்​வளவு வலிமை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்​லை. பெரும்​பாலும் திக்குமுக்காடிப் போவேன் என்​று​ தான் நினைத்​தேன்” என்று கூறியுள்​ளார்.

SCROLL FOR NEXT