எம்.ஜி.ஆர். சிவாஜி அகாடமியின் 41-வது திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் இவ்விருது விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில், கே.பாக்யராஜுக்கு சிறந்த திரைக்கதை மன்னன் விருது, இயக்குநர் ஆர்.பார்த்திபனுக்கு டாக்டர் கலைஞர் விருது, நடிகை கவுதமிக்கு புரட்சித்தலைவி அம்மா விருது, இயக்குநர் கே.எஸ் ரவிகுமாருக்கு எம்.ஜி.ஆர் விருதுகள் வழங்கப்பட்டன.
நடிகர் திலகம் சிவாஜி விருது, இயக்குநர் பி.வாசுவுக்கும் ஏவி.எம் சரவணன் சாதனையாளர் விருது எஸ்.பி.முத்து ராமனுக்கும் கேப்டன் விஜயகாந்த் விருது நளினிக்கும் வழங்கப்பட்டன. செவாலியர் விருது பெற்ற பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணியை பாராட்டி விருது வழங்கப்பட்டது. ‘சிறை’ படத்துக்காக விக்ரம் பிரபுவுக்குச் சிறந்த நடிகர் விருதும் சிறந்த நடிகர் சிறப்பு விருது சண்முக பாண்டியனுக்கும் வழங்கப்பட்டன.