புன்னகை மன்னன்,  தி ரெவெனன்ட், லாஸ்ட் இன் ட்ரான்​ஸ்​லேஷன்

 
தமிழ் சினிமா

லொகேஷன் - காட்சியின் உள்ளார்ந்த இதயம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 07

சி.ஜெ.ராஜ்குமார்

திரைப்​படத்​தில் ஒவ்​வொரு ஃப்​ரேமிலும் இருக்​கும் காட்​சித் துணுக்​கும் முக்​கிய​மானவை​தான். ஆனால்,அந்​தக் காட்​சி​யின் உள்​ளுணர்வு அதைக் காட்சிப்​படுத்​தி​யிருக்​கும் இடம் தான். அந்த இடமே காட்​சிக்​குண்​டான உண்​மை​யான ஆழத்​தைத் தரு​கிறது. லொகேஷன் என்​பது திரைப்​படத்தை படமாக்​கும் படப்​பிடிப்​புத் தளம் மட்​டுமே அல்ல; அது கதை​யின் உயிர்ப்பை வடிவ​மைக்​கும் மாயப்​பின்​னணி.

சுவாசிக்​கும் உணர்​வாக இடம்: சில இடங்​கள் உணர்ச்​சியை எடுத்​துச் சொல்​லாமல், பார்​வை​யாளர்​களை தாமே உணரச் செய்​கின்​றன.

தி ரெவெனன்ட் (2015): ஹாலிவுட் படமான இதில் கடும் குளிர் காடு​கள், அந்​தப் படத்​தின் ‘சர்​வைவல்’ (உயிர் வாழ்​தல்) உணர்வை நம் மனதில் செதுக்​கியது போல, கதை​யின் ஆழமான மனநிலையை இடம் உரு​வாக்​கு​கிறது.

கதாபாத்திரங்களை வடிவமைக்கும் இடம்: இடத்​தின் தன்மை அங்கு வாழும் அல்​லது பயணிக்​கும் மனிதர்​களைப் பிர​திபலிக்​கிறது.

இன் டு தி வைல்ட் (2007): அலாஸ்கா வின் வெறிச்சோடிய பரந்த நிலப்​பரப்​பு, கதா​நாயகனின் தனிமை மற்​றும் சுதந்​திர விருப்​பத்​துக்கு ஒரு கண்​ணாடி​யாக மாறுகிறது.

இந்​திய சினிமா - இடத்​தின் கலைந​யம்: தமிழ் திரைப்​படங்​களில் லொகேஷனை ஒரு கதை சொல்​லும் பாத்​திர​மாக மாற் றிய படைப்​பாளர்​களில் முன்​னோடி​யாக நின்​றவர் இயக்​குநர் பார​தி​ராஜா. கடலோரக் கவிதைகள் (1986): இங்கு கடற்​கரை ஒரு பின்​புலம் மட்​டுமல்ல; அதுவே காதல், தனிமை, எதிர்​பார்ப்​பு, மற்​றும் மனித அடக்​கு​முறை​களி​லிருந்து வெளி​யேறும்​ ஓட்​டம் ஆகிய உணர்ச்​சிகளை உள்​ளடக்​கிய ஓர் இடம். முட்​டம் கடற்​கரை இன்று வரை பார​தி​ராஜா​வின் காட்​சிக் கவிதை​யின் சின்​ன​மாகவே பேசப்​படு​கிறது. அந்த ஊதாநீல வானம், மணல்​வெளி, கடற்​கரை​யின் நிழல் - எல்​லாமே கதா​பாத்​திரங்​களின் மனநிலை​யைத் தாங்​கிய உயிருள்ள பிரதேச​மாக உரு​வெடுக்​கின்​றன.

புன்​னகை மன்​னன் (1986): இத்​திரைப்​படத்​தின் மூலம் அதிரப்பள்ளி அருவி காதலின் நினை​வுச் சின்னமாகவே மாறியது. ரகு​நாத ரெட்​டி​யின் ஒளிப்​ப​தி​வில் காதலும், துயர​மும் நிறைந்த அந்த அருவிக் காட்​சி, தமிழ் சினி​மாவின் காட்​சிக் குறி​யீ​டாக (விஷுவல்​ ஐடென்​டிட்​டி) மாறியது. பிற்​பகு​தியில் ஒரு மன​நிலைக் குறி​யீ​டாக (மூட்​ ஏங்​கர்) மாறு​வதற்​கும் இதுவே மிகச் சிறந்த உதா​ரணம்.

நகரப் பின்​புலங்​கள் - நகரங்​களின் குரல் லாஸ்ட் இன் ட்ரான்​ஸ்​லேஷன் (2003): டோக்​கியோ நகர சாலை​யில் ஒளிரும் நி​யான் விளக்​கு​கள் கதா​பாத்​திரங்​களின் தனிமை மற்​றும் இடர்​பாடு​களுக்​கான ஒரு மேடை​யாகின்​றன. விக்​ரம் வேதா (2017): இப்​படத்​தில் சென்​னை​யின் கரடு​முர​டான குறுகிய தெருக்​கள் மற்​றும் மேம்​பாலங்​களின் கீழ்ப்​பகு​தி​கள் - ஈரமான கான்​கிரீட் அமைப்பு (டெக்​ஸர்) கதை​யின் மையமான தார்​மீகத் தை (க்ரே மொராலிட்​டி) காட்சி ரீதி​யாக நிறு​வு​கிறது.

வெறுமை​யின் மேடை ஹெர் (2013): அ​தி​கப் பரப்​பும், வெறுமை​யும், காலி​யான நீண்ட தாழ்​வாரங்​களும் (எம்ப்​டி ஹால்​வேஸ்) -உள்​ளுணர்வை விரி​வாக்​கும் அமை​தி​யான கட்​டிடக்​கலை (சைலஸ்ட் ஆர்க்​கிடெக்​சர்). கோர்ட் (2014): நீதி​மன்​றத்​தில் ஒரு சாதாரண நாளின் வெறுமை​யைக் காட்​சிப்​படுத்​து​வதன் ​மூலம் அங்கு மனித வாழ்க்கை சுழற்​சியே பின்​புல​மாகிறது. இது இந்​திய யதார்த்​த​வாதத்​தின் (இண்​டியன் ​ரியலிசம்) மிகச் சிறந்த, இடத்தை மையமாகக் கொண்ட கதை சொல்​லல்.

மனநிலை​யின் காலநிலை: பின்​புலம் என்​பது கதா​பாத்​திரங்​களின் காலநிலை​யாக மாறுகிறது.

தி லைட்​ ஹவுஸ் (2019): இடமே ஒரு மோதலாக (கான்ஃப்​ளிக்ட்) மாறுகிறது. இருண்ட கலங்​கரை விளக்​கம் மற்​றும் சுற்​றி​யுள்ள சூழல், கதா​பாத்​திரங்​களின் மன அழுத்​தத்​தைப் பிர​திபலிக்​கிறது.

தும்​பாட் (2018): மழை, சேறு, இருள்- இத்​தகைய பின்​புலம் கதை​யின் க்ரீட்​மி​தாலஜியை தாங்​கும் உளவியல் காலநிலை​யாகிறது (சைகலாஜிகல் க்ளைமேட்).

புராணத்தை உரு​வாக்​கும் நிலப்​பரப்பு: இடத்​தின் பிரம்​மாண்​டம் ஒரு புராணத் தன்​மையை உரு​வாக்​கு​கிறது. லார்ட் ஆஃப் தி ரிங்​ஸ், பாகுபலி ஆகிய படங்களில் நவீன வாழ்​வின் கூறுகளான மின்​சார கம்​பிகள், செல்ஃ​போன் டவர்​கள், சுவரொட்​டிகள் ஆகிய வற்றை கவன​மாகத் தவிர்த்​து​விட்டு அதிபிரம்​மாண்​ட​மாகக் காட்​டப்​படும் அரண்மனை​கள், மலைகள், அருவி​கள், பாறை​கள், முழு​வதுமே ஒரு புராண புவி​யியலின் அடி​நாத​மாக ஒளிர்கிறது.

இயக்​கத்​தில் உள்ள இடம்: பின்​புலம் நகரும்​போது, கதை​யின் வேக​மும் பார்​வை​யாளர்​களின் இதயத்​துடிப்​பும் அதி​கரிக்​கிறது.

ட்ரெ​யின் டு பூசான் (2016): பின்​புலம் நகர்​கிறது, கதை​யும் நகர்​கிறது ர​யில் என்​பது ஒரு அவசர உணர்​வைக் கொடுக்கும் லொகேஷன்.

இடத்​தின் நிற மொழி: இடத்​தின் நிறம் காட்​சி​யின் உணர்ச்​சி​யை​யும் தொனியை​யும் (டோன்​) தீர்​மானிக்கிறது.

சாய்​ராட் ( 2016): சோலாபூர் கிராமத்​தின் வெப்ப நிறத்​தொனி​யில் (வார்ம் டோன்) காணப்​படும் ஏரி​யும், நிலப்​பரப்​பும் - காதலின் அப்​பா​வித்​தனத்​துக்கு ஒரு காட்​சிக் குறி​யீ​டாக (விஷுவல் மெடாஃபர்) மாறுகின்​றன. பிற்​பகு​திக் காட்​சிகளில் ஹைத​ரா​பாத் நகரின் நெரிசல் மிகுந்த தெருக்​களில் உள்ள பல்​வேறு வண்​ணக் கலவை​கள் மேலும் பதட்​டத்​தை​யும் சிக்​கலை​யும் புதிய வடி​வில் உரு​வாக்​கின. அந்த நகரின் பரபரப்​பான​ வாழ்க்​கை, கதா​பாத்​திரத்​தின் கஷ்டப்​பாதையை கூர்​மை​யாகக் காட்​டு​கிறது.

இடம் என்​பது காட்​சி​யின் இதயம்: சிறந்த ஒளிப்​ப​திவு என்​பது கேம​ரா​வில் எங்கே ஃப்​ரேம் வைக்க வேண்​டும் என்​ப​தைப் பற்​றியது. இடம் (லொகேஷன்), உணர்வை நிர்ண​யிக்​கிறது. கதைக்கு முழு​வடிவம் தரு​கிறது. ஒளி–நிழல் தரத்தை மேம்​படுத்​துகிறது. நிறத்​தை​யும்​ ஆழத்​தை​யும்​ தீர்​மானிக்​கிறது. க​தா​பாத்​திரத்​தின்​ மனநிலையை பிரதிபலிக்​கிறது​.

(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)

- cjrdop@gmail.com

முந்தைய அத்தியாயம்: காட்சி அமைப்பு - வெளி​யின் மவுன மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 06

SCROLL FOR NEXT