தமிழ் சினிமா

திரையுலகில் 25 ஆண்டுகள்: அக்.10-ல் மலேசியாவில் நடக்கிறது கவுதம் மேனனின் ‘ஒன்றா இரண்டா’

நிலா

இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன், திரை​யுல​கில் 25 ஆண்​டு​களை நிறைவு செய்​ததையொட்​டி, இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் சென்​னை​யில் பிரம்​மாண்ட இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. அவர் படங்​களில் இடம்​பெற்ற பாடல்​களைக் கொண்ட இந்​நிகழ்ச்சி வரவேற்​பைப் பெற்​றது.

இதன் தொடர்ச்​சி​யாக இந்த நிகழ்ச்சி இப்​போது மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் நடக்க இருக்​கிறது. அக்​.10-ம் தேதி நடக்​கும் இந்​நிகழ்ச்​சிக்கு ‘ஒன்றா ரெண்டா ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

கவுதம் வாசுதேவ் மேனனின் திரை​யுல​கப் பயணத்​துடன் இணைந்த மறக்க முடி​யாத இசை, கதைகள் மற்​றும் இனிய நினை​வு​களை ஒரே மேடை​யில் ஒன்​றிணைக்​கும் வகை​யில் இந்த நிகழ்ச்சி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

நிகழ்ச்​சி​யில் பிரபல பாடகர்​களான கார்த்​திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், பிளாஸ், சைந்​த​வி, பால் டப்​பா, சத்ய பிர​காஷ் மற்​றும் ஹரிப்​ரியா ஆகியோர் பங்​கேற்​று, கவுதம் வாசுதேவ் மேனனின் திரைப்​படங்​களில் இடம்​பெற்ற பாடல்​களை பாட உள்​ளனர். இந்​நிகழ்ச்​சியை மை ஈவன்ட்ஸ் இன்​டர்​நேஷனல் நிறு​வனத்​துடன் இணைந்து ராடான் நிறு​வனம் நடத்​துகிறது.

SCROLL FOR NEXT