தமிழ் சினிமா

​“காதல் டிரெண்ட் எப்​பவுமே மாறாது!” - செல்வராகவன் நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

இயக்​குநர் செல்​வ​ராகவன் இப்​போது நடிப்​பிலும் கவனம் செலுத்தி வரு​கிறார். அவர் கதா​நாயக​னாக நடித்​துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ வெள்​ளிக்​கிழமை வெளி​யாகி இருக்​கிறது. அடுத்து அவர் நடித்​துள்ள சில திரைப்​படங்​கள் வெளி​யாக இருக்கின்​றன. இந்​நிலை​யில் அவரிடம் உரை​யாடிய​தில் இருந்து ஒரு பகு​தி...

உங்கள் தந்தை கஸ்​தூரி ராஜா ‘ஹபீபி’ படத்​துல முக்​கிய வேடத்​துல நடிச்​சிருக்​கார். தனுஷ் தொடர்ந்து நடிச்​சிட்​டிருக்​கார். மரு​மகன் பவிஷும் நடிக்க வந்​துட்​டார்​... நீங்​களும் இப்ப நடிப்​புல இறங்​கீட்​டீங்​க..?

நான் ‘ஆக்​ஸிடென்​டா’ நடிக்க வந்​தவன். ‘சாணிக்​கா​யிதம்’ படத்​துல நடிக்​கணும்னு இயக்​குநர் அருண் மாதேஷ்வரன் தொடர்ந்து கேட்​டுக்​கொண்​ட​தால அதுல நடிச்​சேன். அது தொடர்ந்​துட்டு இருக்​கு. இப்போ ‘மனிதன் தெய்​வ​மாகலாம்’ படத்​துல கதை​யின் நாயகனா நடிச்​சிருக்கேன். அது எளிமை​யான மக்​களின் கதைங்​கற​தால, அது எனக்கு பொருந்​தும்னு இயக்​குநர் டென்​னிஸ் மஞ்​சு​நாத் நம்​பி​னார். அதனால நடிச்​சேன். எங்க குடும்​பத்​துல நடிக்​கணும்னு யாருமே திட்​ட​மிட்டு வரலை. அதுவா அமைஞ்​சது​தான். தனுஷே பெரிய செஃப் ஆகணும்னு தான் நினைச்​சார். நான் ரொம்ப கட்​டாயப்​படுத்​தித்​தான் ‘துள்​ளுவதோ இளமை’ படத்​துல நடிக்க வச்​சேன். என்​னைப் பொறுத்​தவரை நான் அமெரிக்கா போய், அதி​கம் படிக்​கணும்னு நினைச்​சேன். ஆனா, குடும்ப சூழ்​நிலை காரண​மாக நடிக்க வந்​துட்​டோம்.

நீங்க அறி​முக​மான ‘துள்​ளுவதோ இளமை’ 2002-ல் ரிலீஸ் ஆச்​சு. இந்த மே மாதத்​தோட 25 வருஷம் கடந்​துடுச்​சு... எப்​படி இருக்கு இந்த பயணம்?

நல்​லாருக்​கு. அதோட, ‘என்​னடா இது, காலம் இவ்​வளவு வேகமா ஓடு​தே’ங்​கிற பயமும் இருக்​கு. இந்​தப் பயணத்​துல நிறைய அனுபவம் கிடைச்​சிருக்​கு.

ஆரம்​பத்​துல டைரக்‌ஷன்ல மட்​டும்​தான் கவனம் இருந்​தது. இப்ப நடிப்​பு, இயக்​கம்னு ரெண்டு பக்​க​மும் போயிட்​டிருக்​கீங்க, எப்​படி​யிருக்​கு?

தனுஷ்கிட்​ட​தான் கேட்​டேன், ‘எப்​படி ஒரே நேரத்​துல பல வேலைகள் பண்​றது?’ன்​னு. அவர் ‘நமக்கு வேற என்ன தெரி​யும்?’ அப்​படிங்கற ஒரே வார்த்​தை​யில முடிச்​சுட்​டார். நியாய​மான பதிலா இருந்​தது. அதனால அப்​படியே என்​னை​யும் மாத்​திக்கிட்​டேன். அது இயல்​பாகவே நடந்​தது. நடிக்​கப் போனா நடிப்​பு. டைரக்‌ஷன் பக்​கம் வந்​தா, அதை பார்க்​கறதுன்னு மாறிக் கிட்​டேன். டைரக்‌ஷன் ஈசி இல்​லை. அது சின்ன வயசுல இருந்தே கனவோட வந்த விஷ​யம். அதை விட்​டுர முடி​யாது. நடிப்​பைப் பொறுத்​தவரை நிறைய பண்​ணிட்டே இருக்​கலாம். ஒரு சின்ன எக்​ஸ்​பிரஷன் கூட அர்த்​தத்தை மாத்​தும். ஒரு கேரக்​டர்ல நடிக்​கிறீங்​கன்​னா, அந்த கேரக்​டரை விட்டு வெளிய போகாம பண்​ணணும். அந்த அளவை தாண்​டாம இருக்​கணும். அதுல நிறைய விஷ​யங்​கள் இருக்​கு. அது​வும் ஒரு சவால்​தான்.

தமிழ் சினி​மாவுல ‘ரைட்​டர்​ஸ்’ அதி​கமா இல்​லைன்னு சொல்​லிட்டே இருக்​காங்​க...நீங்க என்ன நினைக்​கிறீங்க?

ரைட்​டர்ஸ் இல்​லாம எப்​படி இவ்​வளவு வருஷமா சினிமா பண்ணியிருக்க முடி​யும்? எனக்கு தெரிஞ்ச அளவுல ஏகப்​பட்ட ரைட்​டர்ஸ் இருக்​காங்க. புது​சாக​வும் நிறைய பேர் வந்​துட்டு இருக்​காங்க. ‘சொர்க்​க​வாசல்’ படம் பார்த்​துட்டு அந்த ரைட்​டிங்கை ரொம்ப ஆச்​சரியமா பார்த்​தேன். ‘இப்​படியொரு கதை எனக்கு கிடைக்கலை​யே, நான் டைரக் ஷன் பண்​ணிருப்​பேனே’ன்னு நினைச் சேன். அதனால ரைட்​டர்ஸ் நமக்கு இல்​லைன்னு சொல்றது புரளி​தான்.

உங்​களோட ‘காதல் கொண்​டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ மாதிரி​யான காதல் படங்​கள் ‘டிரெண்ட் செட்​ட​ரா’ இருந்​துச்​சு. இப்ப வர்ற காதல் படங்​கள் பற்றி என்ன நினைக்​கிறீங்க?

லவ் டிரெண்ட் எப்​பவுமே மாறாது. ஆணோ, பெண்ணோ பார்த்த தும் வர்​றது​தானே காதல். ஒரு பெண்ணை பார்க்​கறதுக்​காக, சும்மா அந்த இடத்​தைக் கடக்​கறதைப் பார்க்​கறதுக்​காக, ஒரே ஒரு லுக்​-குக்​காக, தெரு​முனை​யில சைக்​கிளை வச்​சுக்​கிட்டு காத்​துக் கிடக்​கிறது​தான் எனக்கு தெரிஞ்ச, என் காலத்து காதல். அதை அவங்க அப்​பாவோ, எங்க அப்​பாவோ பார்த்தா கண்​டிப்பா அடி விழும். அந்​தக் காதல் இன்​னைக்கு மாறி இருக்​கு. அப்​படி​யிருந்​தா​லும் காதல்ல பெரிய மாற்​றம் ஏதும் இல்​லை. ஆனா, காலங் காலமா ‘மாறிடுச்​சு, மாறிடுச்​சு’ன்னு சினி​மாவுல சொல்​லிட்டே இருப்​​பாங்​க. என்​னைப் பொறுத்​தவரை எந்​த ​மாற்​ற​மும்​ இல்​லை.

ஆயிரத்​தில் ஒரு​வன்​ 2, புதுப்​பேட்​டை 2... இதெல்​லாம்​ வருதுன்​னு அப்​பப்​ப நியூஸ்​ வருதே...

கண்​டிப்​​பா உரு​வாக்​கு​வேன்​. எப்​ப அப்​படிங்​கறதை இப்​ப சொல்​ல முடி​யாது. ஆ​னா, வரும்​.

          
SCROLL FOR NEXT