தமிழ் சினிமா

இளையராஜா பயோபிக் நிலை என்ன? - இயக்குநர் தரப்பு விளக்கம்

ப்ரியா

இளையராஜாவின் பயோபிக் கைவிடப்​பட​வில்லை என்றும் அதன் படப்​பிடிப்பு விரை​வில் தொடங்​கும் என்றும் இயக்​குநர் அருண் மாதேஸ்​வரன் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

பிரபல இசை அமைப்​பாளர் இளை​ய​ராஜா​வின் வாழ்க்கை கதை, திரைப்​பட​மாகிறது. இப்​படத்​துக்​கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் நடந்​தது. கமல்​ஹாசன் உள்​ளிட்ட பிரபலங்​கள் இதில் கலந்து கொண்டனர். இளை​ய​ராஜா​வாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்​வரன் இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. தொடக்க விழாவுக்​குப் பிறகு அப்​படம் பற்​றிய எந்த தகவலும் வெளியாக​வில்​லை.

          

நடிகர் தனுஷும் இயக்​குநர் அருண் மாதேஸ்​வரனும் மற்ற படங்​களில் கவனம் செலுத்தி வரு​வ​தால் இளை​ய​ராஜா பயோபிக் கைவிடப்​பட்​ட​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்தன. அதோடு அருண் மாதேஸ்வரன் இப்​படத்​திலிருந்து வில​கி​விட்​டார் என்​றும் கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் இதை மறுத்​துள்ள அருண் மாதேஸ்​வரன் தரப்​பு, தற்​போது லோகேஷ் கனக​ராஜ் கதா​நாயக​னாக நடிக்​கும் ‘டிசி’ படத்தை அவர் இயக்கி வரு​கிறார். அது முடிந்​ததும் இளை​ய​ராஜா பயோபிக்கை தொடங்​கு​வார் என்று தெரி​வித்​துள்​ளது. இதனால் இப்​படம் பற்​றிய அடுத்த அப்​டேட் விரை​வில் வெளி​யாகலாம்​ என்​று தெரிகிறது.

SCROLL FOR NEXT