தமிழ் சினிமா

அதிகாலை வெளிச்சம்: திரையில் விரியும் இயற்கையின் கவிதை | ஒளி என்பது வெளிச்சமல்ல 32

சி.ஜெ.ராஜ்குமார்

ஒளி​யின் பிறப்பு

சினி​மா, இருளுக்​கும் ஒளிக்​கும் இடையி​லான ஆட்​டம். இதில் அதி​காலை வெளிச்சம் என்​பது மிக​வும் மென்​மை​யானது, உணர்ச்​சிகர​மானது மற்​றும் சவாலானது.

சூரியன் உதிப்​ப​தற்கு முன்​பிருந்​து, அது அடி​வானத்​தில் தலை​காட்​டும் அந்​தச் சில நிமிடங்​கள் வரை, ஒளி மாறும் விதம் என்​பது ஒரு ஒளிப்​ப​தி​வாள​ருக்​குக் கிடைத்த மிகப்​பெரிய வரம். இயற்​கை​யின் தூரிகை கொண்டு திரை​யில் கவிதை எழுதும் இந்த நேரத்​தைப் பற்றி இங்கே விரி​வாகக் காண்​போம்.

ஒளி​யின் 3 நிலைகள்

அதி​காலை ஒளிப்​ப​திவை 3 முக்​கியக் காலங்​களாகப் பிரிக்​கலாம்:

சூரிய உதயத்​துக்கு முந்​தைய ஒளி

சூரியன் அடி​வானத்​துக்கு கீழே இருக்​கும்​போது நில​வும் இந்த ஒளி ‘ப்ளூ ஹவர்’ என்று அழைக்​கப்​படு​கிறது. இதில் நிழல்​கள் மிக​வும் மென்​மை​யாக இருக்​கும் (Shadowless Light).

ஒளி எல்லா திசைகளி​லிருந்​தும் சமமாகப் பரவுவ​தால், முகங்​களில் ஒரு​வித​மான அமைதி குடி கொண்​டிருக்​கும். இது தனிமை அல்​லது ஒரு புதிய தொடக்​கத்​தைக் குறிக்​கப் பயன்​படும்.

சன் பிரேக்

சூரியனின் முதல் கதிர் அடி​வானத்​தைத் தொடும் அந்​தத் தருணம். ஒளி​யின் திசை மிக​வும் தாழ்​வாக இருக்​கும். இது நீண்ட நிழல்​களை உரு​வாக்​கு​வதுடன், ஒளி​யின் நிறம் நீலத்​திலிருந்து தங்​கம் மற்​றும் ஆரஞ்சு நிறத்​துக்கு மாறும்.

உதயத்​துக்​குப் பிந்​தைய ஒளி

சூரியன் மெல்ல மெல்ல மேலே ஏறும்​போது ஒளி அதன் மென்​மையை இழந்து ‘கான்ட்​ராஸ்ட்’ அதி​கரிக்​கத் தொடங்​கும்.

‘நெஞ்​சத்​தைக் கிள்​ளாதே’ - அசோக்​கு​மாரின் ஒளிச் சாதனை

இயக்​குநர் மகேந்​திரனின் ‘நெஞ்​சத்​தைக் கிள்​ளாதே’ படத்​தில் வரும் “பரு​வ​மே... ” பாடல், அதி​காலை ஒளிப்​ப​திவுக்கு உலகளா​விய ஒரு பாடப்​புத்​தகம். பெங்​களூரு கப்​பன் பூங்​கா​வின் அதி​காலைப் பொழுதை, ஒளிப்​ப​தி​வாளர் அசோக்​கு​மார் ஒரு கதா​பாத்​திர​மாகவே மாற்​றி​யிருப்​பார்.

இந்​தப் பாடல் முழு​வதும் பிர​தாப் போத்​தன் மற்​றும் சுஹாசினி இரு​வரும் ஜாக்​கிங் செய்து கொண்டே இருப்​பார்​கள். அந்த ஓட்​டத்​துக்கு இணை​யாக இயற்​கை​யின் ஒளி​யும் மெல்ல மெல்ல மாறிக்​கொண்டே இருக்​கும்.

நீல நிறத் தொடக்​கம்: பாடல் தொடங்​கும்​போது நில​வும் அந்த அடர் நீல நிறம், இரவுக்​கும் பகலுக்​கும் இடையி​லான ஒரு மெல்​லிய கோடு. அசோக்​கு​மார் எந்​த​வித​மான செயற்கை விளக்​கு​களை​யும் பயன்​படுத்​தாமல், அந்த ‘ஆம்​பியன்ட் லைட்’ (Ambient Light) மூலமே படமாக்​கி​யிருப்​பார்.

பனிமூட்​டத்​தின் மாயம்: பெங்​களூரு​வின் அதி​காலைப் பனிமூட்​டத்தை அசோக்​கு​மார் ஒரு ‘நேச்​சுரல் ஃபில்​ட​ராக’ மாற்​றிக் கொண்​டார். சூரியக் கதிர்​கள் அந்​தப் பனிமூட்​டத்​தின் வழியே ஊடுரு​வும்​போது, ஒளி​யானது மெல்​லிய கோடு​களாகத் தெரி​யும். இது ‘லைட் பிரேக்’ என்று அழைக்​கப்படு​கிறது.

ஒளி​யின் தொடர்ச்சி: ஒரே பாடலில் நீல நிறத்​திலிருந்து மெல்ல மெல்ல மஞ்​சள் நிறத்​துக்கு மாறும் அந்​தத் தருணங்​களை, ஒளி​யின் தீவிரம் (Exposure) மாறாமல் படம்​பிடித்​ததற்​காகவே அசோக்​கு​மார் அந்த ஆண்டு தேசிய விருதை வென்​றார்.

பாலுமகேந்​தி​ரா: நிழல்​களின் கலைஞன்

ஒளிப்​ப​தி​வாளர் பாலுமகேந்​தி​ரா, தனது படங்​களில் அதி​காலை வெளிச்​சத்​தைப் பயன்​படுத்​தும் விதம் தனித்​து​வ​மானது. அவர் செயற்கை விளக்​கு​களைத் தவிர்த்​து, ஜன்​னல் வழி வரும் ஒளியை​யும் அதி​காலைக் குளிர்ச்​சி​யை​யும் அதி​கம் நம்​பி​னார்.

‘மூடு​பனி’ போன்ற படங்​களில் அவர் அதி​காலை நேரத்து நிலப்​பரப்​பு​களைப் படமாக்​கும்​போது, அது ஒரு ஓவி​யத்​தைப் பார்ப்​பது போன்ற அலா​தி​யான உணர்​வைத் தரும். அதி​காலை ஒளி​யில் சரு​மத்​தின் நிறம் எவ்​வளவு இயல்​பாக இருக்​கும் என்​ப​தற்கு அவரது காட்​சிகள் சான்​று.

ஒளிப்​ப​தி​வாளர்​களுக்​கான

தொழில்​நுட்​பச் சவால்​கள் அதி​காலை வெளிச்​சத்​தில் படம்​பிடிப்​பது என்​பது ஒரு தவம். அதற்​குப் பின்​னால் பல தொழில்​நுட்ப நுணுக்​கங்​கள் உள்​ளன.

நேர மேலாண்மை

அதி​காலை ஒளி என்​பது வெறும் 20 முதல் 30 நிமிடங்​கள் மட்​டுமே நீடிக்​கும். எனவே, கேமரா கோணங்​கள் மற்​றும் நடிகர்​களின் அசைவு​கள் (Blocking) ஆகிய​வற்​றைப் பற்றி முன்பே திட்​ட​மிட வேண்​டும்.

கலர் டெம்​பரேச்​சர்

சூரியன் உதிக்​கும்​போது ஒளி​யின் நிறம் 9000கே (நீலம்) -முதல் 2000கே (ஆரஞ்​சு) வரை வேக​மாக மாறும். கேம​ரா​வின் வைடு பேலன்ஸை மிக நுணுக்​க​மாகக் கையாள வேண்​டும்.

எக்​ஸ்​போஷர்

வெளிச்​சம் ஒவ்​வொரு நிமிட​மும் அதி​கரித்​துக்​கொண்டே இருக்​கும். எனவே, லென்​ஸின் அப்​பர்​சர் (Aperture) அல்​லது என்​.டி ஃபில்​டர்​களை (ND Filters) மாற்​றிக்​கொண்டே இருக்க வேண்​டும்.

ஒளி​யின் உணர்​வுப்​பூர்​வ​மான மொழி

அதி​காலை வெளிச்​சம் வெறும் அழகுக்​காக மட்​டுமே பயன்​படுத்​தப்​படு வதில்​லை.

* தனிமை: நீல நிற ஒளி கதா​பாத்​திரத்​தின் தனிமையை ஆழமாக்க உதவும்.

* நம்​பிக்​கை: சூரியனின் முதல் கதிர் முகத்​தில் படும்​போது அது ஒரு புதிய நம்​பிக்​கையை அல்​லது மாற்​றத்தை உணர்த்​தும்.

* இயல்​புத் தன்​மை: ‘நெஞ்​சத்​தைக் கிள்​ளாதே’ பாடலில் ஜாக்கிங் செய்​யும் இயல்​பான அசைவு​களுக்கு அந்த அதி​காலைப் பனிமூட்​டம் ஒரு உயிரோட்​டத்​தைத் தந்​தது.

மேஜிக் ஹவர் மற்​றும் நவீன சினிமா

டிஜிட்​டல் கேம​ராக்​கள் மற்​றும் கலர் கிரேடிங் மூலம் அதி​காலை ஒளியை இன்று உரு​வாக்க முடிந்​தா​லும், அசோக்​கு​மார் மற்​றும் பாலுமகேந்​திரா காட்​டிய அந்த உண்​மைத் தன்மை கிடைப்​ப​தில்​லை.

ரோஜர் டீக்​கின்ஸ் போன்ற உலகப் புகழ்​பெற்ற ஒளிப்​ப​தி​வாளர்​கள் இன்​றும் அந்த ‘ப்ளூ ஹவர்’ காட்​சிகளுக்​காக அதி​காலை 4 மணிக்கே படப்​பிடிப்​புத் தளத்​துக்​குச் சென்​று​விடு​வார்​கள்.

அதி​காலை வெளிச்​சம் என்​பது, ஒரு காட்​சியை வெறும் தகவல் பரி​மாற்​றத்திலிருந்து ஒரு கலைப் படைப்​பாக உயர்த்​துகிறது. பெங்​களூரு கப்​பன் பூங்​கா​வின் பனிமூட்​டத்​துக்​குள் அசோக்​கு​மார் ஒளித்து வைத்​திருந்த அந்த மாயத்தை இன்​றும் நாம் திரை​யில் பார்க்​கும்​போது, அந்த அதி​காலைக் குளிரை நம்​மால் உணர முடிகிறது.

அதி​காலை நீலத்​திலிருந்து மதிய வெளிச்​சம் வரையி​லான அந்​தப் பயணம், ஒரு மனிதனின் அக உணர்​வு​களின் பயண​மாக​வும் அமைகிறது. சினிமா உலகில், நாம் பார்க்​காததே அழகு.

அதி​காலை வெளிச்​சம், அந்த அழகின் ரகசி​யம். அடுத்த முறை நீங்​கள் ஓர் அதி​காலைக் காட்​சி​யைப் பார்க்​கும்​போது, அந்த மெல்​லிய ஒளி​யின்​ மாற்​றத்​தை உணர முயலுங்​கள்​. அது சினி​மா​வின்​ உண்​மை​யான இசை; தெரி​யாத அழகின்​ உச்சம்.

(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)

- cjrdop@gmail.com

SCROLL FOR NEXT