தமிழ் சினிமா

“மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்” - பா.ரஞ்சித்

ஸ்டார்க்கர்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், மக்கள் நல அரசினை வழிநடத்துவார் என்று நம்புவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் சி. ஜோசப் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தமிழக முதல்வராக அதிகாரபூர்வமாக விஜய் பதவியேற்று உள்ளதால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ”எக்ஸ்” தள பதிவில், “தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக் கழக அரசிக்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT