அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ள வெப் தொடர் ‘தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’. இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதை ஜெஸ்வினி எழுதி, இயக்கியுள்ளார். குரு லட்சுமணன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், பிரீத்தி ஷர்மா, சவுந்தர்யா, ஷியமந்தா கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ், விஸ்வாமித்ரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா என பலர் நடித்துள்ளனர்.
பேரபிள் பிக்சர்ஸ் சார்பில் தேவன் சார்லஸ், பிரவீன் குமார், சரண்யா வீரமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த க்ரைம் த்ரில்லர் தொடருக்கு என்.எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஷ்வத் இசையமைத்துள்ளார்.
“தூள் பேட்டை பகுதியில் துணை ஆணையராகப் பொறுப்பேற்கும் அஷ்வின் குமார், அங்கு நடக்கும் 3 கொலைகள் பற்றிய விசாரணையை தொடங்குகிறார். முதல் இரு எபிசோடுகளில் க்ரைம் த்ரில்லர் அம்சங்களுக்கு துளியும் குறைவின்றி ஏராளமான கேள்விகளை எழுப்பும் திரைக்கதை, ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்” என்கிறார் இயக்குநர்.