மும்பை: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் மும்பை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சினிமா தணிக்கை வாரியம் கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டு. தணிக்கை வாரியம் கேடிஎம் ((Key Delivery Message) என்ற பாதுகாப்பு முறையை பின்பற்றுகிறது.
இந்த கேடிஎம் கடவுச் சொல் சினிமா தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்கும். இந்த கடவுச் சொல் இல்லாமல் யாரும் படத்தை பார்க்க முடியாது. ஜனநாயகன் படத்தின் டிசிபி (டிஜிட்டல் சினிமா தொகுப்பு) விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதலுடன் கடந்த 17-ம் தேதி மும்பையில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் அந்த நகல் அவர்களிடம்தான் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.