தமிழ் சினிமா

புராணக் கதை பின்னணி​யில் ஏ.ஐ. மூலம் உரு​வான ‘அவிரா’

நிலா

போட்டோ ரியலிஸ்​டிக் ஏ.ஐ.தொழில் நுட்​பத்​தில் உரு​வாகி வரும் திரைப்​படம் ‘அவிரா’. விளம்பர படங்​களை இயக்​கி​யுள்ள பிரபாகரன், கதை, திரைக்​கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்​தில் இந்​தப் படத்தை இயக்​கி​யுள்​ளார். இதை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்​பெனி சார்​பில் கணேஷ், ஜெகதீஷ் இணைந்து தயாரிக்​கின்​றனர்.

படம்​பற்றி பிர​பாகரன் கூறும்​போது, ‘‘முழு​வதும் போட்டோ ரியலிஸ்​டிக் ஏ.ஐ.தொழில் நுட்​பத்​தில் உரு​வாகும் படம் இது. ‘அவிரா’ என்​றால் பிரபஞ்​சத்​தின் பேரொளி என்று பொருள். புராண காலத்து கதையை அடிப்​படை​யாகக் கொண்டு கற்பனையாக வரும் இந்​தப் படத்தை பான் இந்​தியா திரைப்படமாகத் தயாரித்​துள்​ளேன். குழந்​தைகள் முதல் பெரிய​வர்​கள் வரை அனை​வரும் பார்த்து மகிழும் ஃபேன்​டஸி திரைப்படம் இது. இறு​தி​க்​கட்​ட பணி​கள்​ நடை​பெற்​று வருகின்றன” என்​றார்​.

SCROLL FOR NEXT