இயக்குநர் ராசி அழகப்​பன்

 
தமிழ் சினிமா

ராசி அழகப்​பன் இயக்​கும் ‘ஆண்ட’

நிலா

‘வண்​ணத்​துப்​ பூச்​சி’ என்ற சிறு​வர்​களுக்​கான படத்தை இயக்​கிய ராசி அழகப்​பன் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்​துள்​ளார். இப்​படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்​டர்​நேஷனல் சார்​பில் அவரே தயாரிக்​கிறார்.

படம் பற்றி அவர் கூறும்​போது, “சில வருடங்​களுக்கு முன் நான் எழு​திய ‘விருட்​சம்’ என்ற சிறுகதை​யின் அடிப்​படை​யில் இப்படத்தின் கதையை உரு​வாக்​கி​யுள்​ளேன். ஜென் ஸி தலை​முறை​யின் பார்​வை​யில் தொடங்​கி, 1980-களின் வாழ்க்​கைச் சூழலை உயிர்ப்புடன் கண்​முன் கொண்டு வந்து நிறுத்​தும் கதை​யாக உரு​வாகிறது.

இதில் இடம்​பெறும் தட்​சணா​மூர்த்தி என்ற கதா​ பாத்​திரத்​தின் முழு​மை​யான வாழ்க்​கைப் பயணமே கதை​யின் மையம். வானத்தை நோக்கி கனவு​களைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்​கை, அவன் சந்​தித்த சவால்கள், சமூகப் பொறுப்​பு, மனித நே​யம் மற்​றும் வாழ்​வியல் நெறிகள் ஆகிய​வற்றை பதிவு செய்​யும் படைப்​பாக இது இருக்கும். புது முகங்​கள் நடிக்​கின்​றனர்” என்​றார்.

SCROLL FOR NEXT