பொன்னியன் செல்வன் ஸ்க்ரீன் ஷாட் 
தமிழ் சினிமா

வரும் 15-ல் வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன் ஆன்ந்தம்’

செய்திப்பிரிவு

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் இந்தப் படத்தின் புரமோஷன் தொடங்குகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

இதற்கிடையே ‘பொன்னியின் செல்வன் ஆன்ந்தம்’ தனிப் பாடல் இந்தப் படத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து பாடியுள்ளார். இது, வரும் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT