சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்கள் குழந்தைகள் பெயரை அறிவித்துள்ளனர். 'உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்' என குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளனர் இந்த தம்பதியர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் கடந்த ஆண்டு அக்டோபரில் இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்தனர். இந்நிலையில், தற்போது குழந்தைகளின் பெயரை அறிவித்துள்ளனர்.
உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்பது தான் குழந்தைகளின் பெயர்களாக அறிவித்துள்ளனர். இதில் ‘N’ என்பது நயன்தாராவையும், ‘சிவன்’ விக்னேஷ் சிவனையும் குறிக்கிறது. தற்போது நயன்தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தின் பாடல் காட்சியில் நடித்து வருகிறார்.