தமிழ் சினிமா

சாலையோர மக்களுக்கு நயன்தாரா திடீர் பரிசு

செய்திப்பிரிவு

நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடினார். இந்நிலையில் அவர் எழும்பூர் பகுதியில் சாலையோர மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வழங்கியுள்ளார். அவரும் விக்னேஷ் சிவனும் பரிசுகள் அடங்கிய பையை, சாலையோர மக்களிடம் நேரடியாக வழங்கியுள்ளனர். நயன்தாராவைக் கண்டதும் ஏராளமானோர் அங்கு கூடினர். அனைவருக்கும் பரிசுப் பொருட்களை கொடுத்தபின் இருவரும் காரில் ஏறி சென்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT