தமிழில், ‘ஆழ்வார்’, ‘வள்ளுவன் வாசுகி’, ‘பூவா தலையா’, ‘நான்தான் பாலா’ , ‘பூலோகம்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்வேதா பந்தேகர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா' தொடர் மூலம் பிரபலமான இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில், வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை, அவரது முகத்தைக் காண்பிக்காமல் பதிவு செய்துள்ளார். ‘நீண்ட நாட்களாக என் மனதைத் தொலைத்துவிட்டேன். தற்போது கண்டுபிடித்து விட்டேன், கடவுளுக்கு நன்றி’ என்று பதிவுசெய்துள்ளார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது