தமிழ் சினிமா

முடிவடைந்தது பலே வெள்ளையத் தேவா படப்பிடிப்பு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்

ஸ்கிரீனன்

சசிகுமார் நடித்து தயாரித்துவந்த 'பலே வெள்ளையத் தேவா' படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.

'கிடாரி' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் துவங்கப்பட்டது.

இப்படத்தில் தயாரிப்பாளர் சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரவி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார். செப்டம்பர் 21-ம் தேதி முதல் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு ' ''பலே'' வெள்ளையத் தேவா' என பெயரிட்டது படக்குழு. மேலும், ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டது படக்குழு. அதன்படி நவம்பர் 10ம் தேதி முழுப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள். 50 நாட்கள் முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்ததுக்கு படக்குழுவுக்கு சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தில் சசிகுமாருக்கு அடுத்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT