தமிழ் சினிமா

சசிகுமார் புதுப்பட தலைப்பு - பலே வெள்ளையத் தேவா

ஸ்கிரீனன்

புதுமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் படத்துக்கு ' ''பலே'' வெள்ளையத் தேவா' என பெயரிட்டு இருக்கிறார்கள்.

'கிடாரி' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் துவங்கப்பட்டது.

இப்படத்தில் தயாரிப்பாளர் சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ரவி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார். செப்டம்பர் 21-ம் தேதி முதல் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு ' ''பலே'' வெள்ளையத் தேவா' என பெயரிட்டு இருக்கிறார்கள். மேலும், ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுத் தொடங்கினர். அதன்படி இறுதிக்கட்டப் படப்பிடிப்பை படக்குழு எட்டியிருக்கிறது. நவம்பர் 9-ம் தேதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தனர்.

இப்படத்தில் சசிகுமாருக்கு அடுத்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT