சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும் நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, “மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்று (நேற்று) முதல் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. சிவகார்த்திகேயன், அதிதி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது” என்றனர்.