தமிழ் சினிமா

கலைகளுக்கு மட்டும் நடுவராக இருப்போம்: நடிகர்களுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை

ஸ்கிரீனன்

கலைகளுக்கு மட்டும் நடுவராக இருப்போம் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் நடிகர்களுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது தொலைக்காட்சியில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைக்கு சமரசம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், ஊர்வசி உள்ளிட்ட பலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சிகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா, "தம்பதிகளுக்கிடையே பிரச்சினை வந்தால் அதைத் தீர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. கிரிமினல் குற்றங்களை கையாள தனித்தனி சட்டப் பிரிவுகள் உள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் பார்க்க முடியவில்லை / ஜீரணிக்க முடியவில்லை. இதை தயவு செய்து நிறுத்தலாமே? நாம் கைப்பிடி அளவு கற்று வைத்திருக்கும் கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போமே? ப்ளீஸ்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.

ஸ்ரீப்ரியாவின் இந்த கோரிக்கை, தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT