தமிழ் சினிமா

சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகள் தீவிரம்

ஸ்கிரீனன்

புதுமுக இயக்கநர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த படம் 'சர்வர் சுந்தரம்'. வைபவி ஷந்திலியா, நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்து வந்தனர். பி.கே. வர்மா ஒளிப்பதிவு செய்துவந்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துபாயில் நிறைவுற்றது.

'சர்வர் சுந்தரம்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. சந்தானத்தின் நண்பர் வி.டி.வி.கணேஷ் தயாரித்து வருகிறார்.

'சர்வர் சுந்தரம்' நாயகி வைபவி ஷந்திலியா, ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அபி ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு எடிட்டிங் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள இருக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT