தமிழ் சினிமா

குல தெய்வ கோயிலில் வழிபட திருச்சி சென்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன்

செய்திப்பிரிவு

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தங்கள் குல தெய்வ கோயிலில் வழிபாடு செய்ய திருச்சி சென்றுள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது. அவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. அதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் இந்த ஜோடி தரிசனம் செய்ய இருப்பதாகவும் சினிமா துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று திருச்சியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வாழ்க்கையில் நடக்க இருக்கும் நல்ல விஷயங்களுக்காக கடவுளின் தரிசனத்திற்காக அனுமதி கேட்டு வந்துள்ளோம்' என்று நெகிழ்ச்சியாக சாமிக்கு பூஜை நடக்கும் வீடியோவை பகிர்ந்து இதைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இருவரும் திருச்சி விமான நிலையம் வந்தபோது, விமான நிலையத்தில் பணிபுரியும் உபெண் ஒருவர் நயன்தாராவுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். அப்பொழுது விக்னேஷ் சிவன் அவரது கைபேசியை வாங்கி இருவரும் அந்தப் பெண்ணுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT