சென்னையில் நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் வீரர்களாகவும், நடிகைகள் விளம்பர தூதுவர்களாகவும் பணியாற்ற இருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது.
இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். சூர்யா, விஷால், விஷ்ணு விஷால், தனுஷ் மற்றும் ஜீவா ஆகியோர் 5 மாவட்டங்களின் பெயரிடப்பட்ட அணிக்கு கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்கள். மீதமுள்ள 3 அணிக்கு கேப்டன் யார் என்பதை விரைவில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
மேலும், அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் இக்கிரிக்கெட் போட்டியில் விளம்பர தூதுவர்களாக நியமனம் செய்ய இருக்கிறார்கள். ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மற்றும் சீரஞ்சிவி ஆகியோர் இக்கிரிக்கெட் போட்டியை துவக்கி வைக்க இருக்கிறார்கள்.
இக்கிரிக்கெட் போட்டியில் மொத்த உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. தொலைக்காட்சி உரிமை மற்றும் இதர உரிமைகளின் மூலமாக வரும் பணத்தை அப்படியே கட்டிட நிதிக்கு ஒதுக்க இருக்கிறார்கள்.