தமிழ் சினிமா

வெளியானது அம்மா கணக்கு ஃபர்ஸ்ட் லுக்; ஏப்.22-ல் படத்தை வெளியிட திட்டம்

ஸ்கிரீனன்

தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'அம்மா கணக்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம்.

சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

'நில் பேட்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றி தனுஷ் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. தமிழ் ரீமேக்கிற்கு 'அம்மா கணக்கு' என்று பெயரிடப்பட்டு, இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இப்படத்தை இயக்கினார்.இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி வருகிறார்.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டன. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார் தனுஷ்.

மேலும், ஏப்ரல் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'நில் பேட்டே சனாட்டா' படத்துடன் 'அம்மா கணக்கு' படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

SCROLL FOR NEXT