புதுமுக இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் ஜீவா நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு 'ஜெமினி கணேசன்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
'திருநாள்', 'போக்கிரி ராஜா' ஆகிய படங்களைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜீவா. இப்படத்தை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்-இடம் இணை இயக்குநராக பணியாற்றிய முத்துக்குமார் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் கதை களத்துக்குஏற்றார்போல் 'ஜெமினி கணேசன்' என்று தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்கள். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினரிடம் அனுமதி கோர, அவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜீவாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.