’ஆத்தா’ திரைப்படத்தை கைவிடுவதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாராதிராஜா இயக்கத்தில் பல வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் ’ஆத்தா’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கோவிட்-19 நெருக்கடி காரணமாக படத்தின் தயாரிப்பு வேலைகள் தடைபட்டன.
ஆனால் தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் இனிய தமிழ் மக்களே. 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம்.
காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகிறது..
புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.