தமிழ் சினிமா

'இருட்டு அறையில் முரட்டு குத்து' பார்ட்-2 : அடுத்த வருடம் வெளியீடு

செய்திப்பிரிவு

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. அடுத்த வருடம் (2020) கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்தனர்.

2018-ம் ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது. பலரும் இந்தப் படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், இந்தப் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய 'கஜினிகாந்த்' திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகு அரவிந்த்சாமியை நாயகனாக வைத்து 'புலனாய்வு' என்ற படத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தின் பணிகளுக்கு இடையே, தனது அடுத்த படத்தையும் தொடங்கியுள்ளார்.

தனது இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் 2-ம் பாகத்தைத் தொடங்கவுள்ளார். இதில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். விரைவில் இதில் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்று சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT