தமிழ் சினிமா

சூர்யாவின் 24-ல் இணைந்தார் நித்யா மேனன்

ஐஏஎன்எஸ்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் '24' படத்தில் மற்றொரு நாயகியாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தில் நாயகியாக நடித்தவர் நித்யா மேனன். அப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

'ஓ காதல் கண்மணி', 'காஞ்சனா 2' படத்தைத் தொடர்ந்து தமிழில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் '24' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. "நித்யா மேனன் ஒரு முக்கியமான வேடத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறது. தற்போது அவருடைய காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது" என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

'24' படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்கள். சமந்தா ஒரு நாயகியாக நடித்து வரும் பட்சத்தில் இன்னொரு நாயகியாக நித்யா மேனன் நடித்து வருவதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சூர்யா நாயகனாக நடித்து தயாரித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

SCROLL FOR NEXT