தனுஷுடன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் | கோப்புப் படம் 
தமிழ் சினிமா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்: லண்டனில் படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

'அசுரன்', துரை.செந்தில்குமார் இயக்கி வரும் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். இதனை ஒய்.நாட்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதுவரை எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த படக்குழு, இன்று (ஜுலை 19) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் லண்டனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முழுப்படப்பிடிப்பும் லண்டனிலே முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ஷ்ரயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், விவேக் ஹர்சன் எடிட்டராகவும் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தேர்வு செய்ய தான் இவ்வளவு நாட்கள் ஆனது. தற்போது லண்டனில் படப்பிடிப்பு என்பதை படக்குழு முடிவு செய்துவிட்டதால், அங்குள்ள நடிகர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது படக்குழு.

கார்த்திக் சுப்பராஜ் படத்தை முடித்தவுடன், மாரி செல்வராஜ், செல்வராகவன், ராம்குமார் ஆகியோரது இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்

SCROLL FOR NEXT