தமிழ் சினிமா

நாயகனுக்கும் ரசிகனுக்குமான உறவைச் சொல்லும் பிருந்தாவனம்

ஸ்கிரீனன்

நாயகனுக்கும் ரசிகனுக்குமான உறவைச் சொல்லும் படமாக 'பிருந்தாவனம்' இருக்கும் என்று தெரிவித்தது படக்குழு.

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி, விவேக், தான்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிருந்தாவனம்'. படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஷான் சுதர்சன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதைக்களம் குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, "நடிகருக்கும், ரசிகனுக்கும் இடையேயான உறவுதான் கதை. விவேக் நடிகராகவும், அருள்நிதி ரசிகராகவும் நடித்துள்ளனர்.

காது கேட்காத - வாய் பேச முடியாத நபராக அருள்நிதி நடித்துள்ளார். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து, இறுதியில் உணர்ச்சிகரமாகவும் சில காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் ராதாமோகன். அருள்நிதி - விவேக் இருவரும் படம் முழுக்க இணைந்தே இருப்பார்கள்" என்று தெரிவித்தார்கள்.

விரைவில் இப்படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்து, விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT