பத்ம பூஷண் விருது பெறுவதையொட்டி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், "பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு, முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன்.
அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது, நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு.
பத்ம பூஷண் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மன்மார்ந்த வாழ்த்துக்கள், முக்கியமாக என் நண்பர் வைரமுத்து அவர்களுக்கு" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.