தமிழ் சினிமா

‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் புதிய தொழில்நுட்பம்!

செய்திப்பிரிவு

ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. இதை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார். நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் புரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான வியோ 3 (Veo3 AI) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு உண்மையான மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ போல் தோன்றும் இவை, செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை மே மாதம்தான் கூகுள் நிறுவனம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிமுகப்படுத்தப் படவில்லை.

SCROLL FOR NEXT