தமிழ் சினிமா

‘கூலி படத்தில் நான் நடிக்கவில்லை’ - தெளிவுப்படுத்திய சிவகார்த்திகேயன்

ஸ்டார்க்கர்

‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அது தொடர்பான கேள்விக்கு சிவகார்த்திகேயன், “மாவீரன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, இயக்குநர் சந்துரு, இயக்குநர் மடோன் அஸ்வின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அனைவருமே எனக்கு நண்பர்கள். நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுவோம்.

ஆனால், ‘கூலி’ படப்பிடிப்புக்கு இன்னும் செல்லவில்லை. எனது வீட்டிற்கு எதிரில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஆனால், ‘அமரன்’ விளம்பரப்படுத்தும் பணிகளால் இன்னும் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லவில்லை. ‘கூலி’-யில் நான் நடிக்கவில்லை. அது எனது தலைவர் படம். ஆகையால் தவறான செய்திகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இதில் ஆமிர்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT