விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்ரேகர், ஜெகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா உள்பட பலர் நடிக்கும் திரைப்படம், ‘நாகபந்தம்’. அபிஷேக் நாமா எழுதி இயக்கியுள்ள இப்படம், ஜூலை 3ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையைப் படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். விழாவில் அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட திருவுருவச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த ரத யாத்திரை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று கலாச்சாரப் பெருமையையும் ஆன்மீகச் செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் அபிஷேக் நாமா, “இது வெறும் திரைப்பட விளம்பரத்துக்கான பயணம் அல்ல; நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் புனிதமான பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.