தென்னிந்திய சினிமா

‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​துக்கு எதி​ராக போராட்​டம் - காட்​சிகள் ரத்து

ப்ரியா

‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ படத்​துக்கு எதி​ராகத் தொடரப்​பட்ட வழக்​கில் கேரள உயர் நீதி​மன்ற நீதிப​தி, “2 வாரங்களுக்கு படத்தை திரை​யிட இடைக்​காலத் தடை விதிக்கப்படு​கிறது. மேலும் சமூக நல்​லிணக்​கத்தை சீர்குலைக்காமல் இருப்​பதை உறுதி செய்​வதற்​கான வழிகாட்டுதல்​களை மத்​திய திரைப்பட சான்றிதழ் வாரி​யம் பின்பற்​ற​வில்​லை” என்​றும் தெரி​வித்​தார்.

தனி ​நீ​திப​தி​யின் இந்த உத்​தர​வுக்கு எதி​ராக, தயாரிப்​பாளர் விபுல் ஷா தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை, உயர்​ நீ​தி​மன்ற நீதிப​தி​கள் சுஸ்​ருத் அரவிந்த் தர்​மா​தி​காரி மற்​றும் பி.​வி.​பால​கிருஷ்ணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரித்து தனி நீதிபதி விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து இப்​படம் வெளி​யானது.

          

கேரளா​வில், 38 திரையரங்​கு​களில் மட்​டுமே இப்​படம் திரையிடப்பட்​டுள்​ளது. தெற்கு கேரளா​வில் 9 திரையரங்குகளிலும் எர்​ணாகுளம், திருச்​சூர், பாலக்​காடு மாவட்டங்​களில் 14 திரையரங்​கு​களி​லும், மலபாரில் 15 திரையரங்​கு​களி​லும் படம் திரை​யிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் மாநிலத்தை இழி​வுபடுத்​தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்​படத்​தைத் திரை​யிட அனு​ம​திக்​கக்கூ​டாது என்​றும், திரையிடலை ரத்து செய்ய வேண்​டும் என்​றும் இந்​திய ஜனநாயக வாலிபர் சங்​கம் கேரள மாநிலம் முழு​வதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்​டது.

கண்​ணூர் மற்​றும் கொச்​சி​யில் உள்ள திரையரங்​கு​களில் போராட்டம் காரண​மாக நேற்று காலை காட்சி ஒத்திவைக்கப்பட்டது. பல திரையரங்​கு​களில் பார்​வை​யாளர்​கள் வராத​தால் காட்​சிகள் ரத்து செய்​யப்​பட்​டன.

SCROLL FOR NEXT