தென்னிந்திய சினிமா

ரசிகர்களிடம் சிக்கிய நிதி அகர்வால்: போலீஸ் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

நடிகர் பிர​பாஸ் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம் ‘தி ராஜா சாப்’. சந்​துரு இயக்​கி​உள்ள இந்த பான்​இந்​தியா படத்​திலிருந்து ‘சஹானா சஹா​னா’ என்ற 2-வது பாடல் வெளி​யிடப் பட்​டது. இதற்​கான நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் உள்ள லுலு மாலில் நடை பெற்​றது. அதில், படத்​தில் நடித்த நிதி அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்​டனர். நிகழ்ச்சி தொடங்​கியது முதலே பாது​காப்பு தடுப்​பு​களை மீறி ரசிகர்​கள் கூட்​டம் கூடிக் கொண்டே இருந்​தது.

நிகழ்ச்சி முடிவடைந்​ததும் நிதி அகர்​வால், தன்​னுடைய காரை நோக்​கிச் சென்​ற​போது அவரை ரசிகர்​கள் சூழ்ந்து கொண்​டனர். சிலர் அவரை தொட முயன்​ற​தா​ல் பரபரப்பு ஏற்​பட்​டது. நிதி அகர்​வாலால் நகர​முடிய​வில்​லை. அங்​கிருந்த சில பாது​காவலர்​கள் ஓடி வந்து அவரை மீட்டு காரில் ஏற்றி வைத்​தனர். காருக்​குள் அமர்ந்​ததும் அந்த அதிர்ச்​சி​யில் இருந்து அவரால் மீள​முடிய​வில்​லை.

இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. இச்​சம்​பவத்​துக்​குப் பலர் கண்​டனம் தெரி​வித்​தனர். முறை​யான பாது​காப்பு ஏற்​பாடு​களோ, திட்​ட​மிடு​தலோ இல்​லாததே இதற்​குக் காரணம் என்று கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இச்​சம்​பவம் தொடர்​பாக லுலு மால் மற்​றும் அனு​ம​தி​யின்றி நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்​தவர்​கள் மீது போலீ​ஸார் தாமாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT