தென்னிந்திய சினிமா

ஒரு தெலுங்கு, ஒரு பாலிவுட் - மிருணாள் தாக்குர் திட்டம்

செய்திப்பிரிவு

இந்தி நடிகை​யான மிருணாள் தாக்​குர், தெலுங்​கில் இருந்து மொழி​மாற்​றம் செய்​யப் பட்டு வெளி​யான ‘சீ​தா ​ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்​களின் மூலம் தமிழிலும் அறியப்​பட்​டார். இந்தி, தெலுங்கு படங்​களில் நடித்து வரும் அவர், இரண்டு மொழிகளி​லும் கவனம் செலுத்தி வரு​வ​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் சரி​யாகத் திட்​ட​மிட்டு படங்களில் நடித்து வரு​கிறேன். எதை​யும் முன்​கூட்​டியே திட்டமிடுவது எனக்​குப் பிடிக்​கும். அதன்​படி சென்​று​ கொண்டிருக்கிறேன். தென்​னிந்​திய ரசிகர்​களை​யும் ஏமாற்றக்கூடாது என்று நினைக்​கிறேன். பாலிவுட் எனக்​குப் பழக்கப்​பட்ட துறை என்​ப​தால், நடிகை​யாக எல்​லைகளைத் தாண்டி செல்ல விரும்​பு​கிறேன்.

நான் நடித்​துள்ள இந்தி படமான, ‘தோ தீவானே ஷெஹர் மே’ பிப்ரவரி​யிலும் பான் இந்​தியா முறை​யில் உரு​வாகி​யுள்ள ‘டெகாயிட்’ மார்ச் மாத​மும் வெளி​யாகிறது.

இதையடுத்து இந்தி படமான ‘யே ஜவானிதோ இஷ்க் ஹோனா ஹே’ வெளி​யாக இருக்​கிறது. இதன் மூலம் ஒரு தெலுங்​கு, ஒருபாலிவுட் என சமநிலைப்​ படுத்த முயல்​கிறேன். இது கடின​மானது ​தான். ஆனால் இது நான் கனவு கண்ட ஒன்று என்​ப​தால் அதைச் செயல்​படுத்​திக் கொண்டிருக்​கிறேன்​” என்​றார்​.

SCROLL FOR NEXT