தென்னிந்திய சினிமா

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா? - பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை வேதனை

செய்திப்பிரிவு

பிரபல நடிகை கடத்​தப்​பட்டு பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்​ளான வழக்​கில் டிச.8-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்பட்டது. 6 பேரை குற்​ற​வாளி​கள் என்று தீர்ப்​பளித்​த நீதிமன்றம் அவர்​களுக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை வழங்​கியது. 8-வது குற்​ற​வாளி​யான நடிகர் திலீப் இவ்​வழக்​கில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்​ளான நடிகை, இத்​தீர்ப்பு குறிப்பு பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்ளார்.

அதில், “8 ஆண்​டு​கள், 9 மாதங்​கள், 23 நாள்​கள் கழித்து இந்த நீண்ட வலிமிகுந்த பயணத்​தில் இறு​தி​யாகச் சிறிய வெளிச்சத்தைக் காண்​கிறேன். 6 பேர் குற்​ற​வாளி​களாக அறிவிக்கப்​பட்​ட​தில் நன்​றி. என்​னுடைய வேதனையைப் பொய்யென்​றும் இந்த வழக்​கைக் கற்​பனைக் கதையென்​றும் சொன்​னவர்​களுக்கு இந்த தருணத்​தைச் சமர்ப்​பிக்​கிறேன்.

இன்று நீங்​கள் நிம்​ம​தி​யாக இருப்​பீர்​கள் என நம்​பு​கிறேன். மேலும், முதல் குற்​ற​வாளி என் தனிப்​பட்ட ஓட்​டுநர் என சிலர் கூறிக்கொண்டே இருக்​கின்​றனர். இது பொய். அவர் என் ஓட்டுநரும் இல்​லை. என் பணி​யாள​ரும் இல்​லை. எனக்கு அறிமுகமானவரும் அல்ல. 2016ல் நான் பணி​யாற்​றிய ஒரு திரைப்படத்​துக்கு ஓட்​டுநராக நியமிக்​கப்​பட்​ட​வர் அவர்.

அப்​போது ஓரிரு முறை மட்​டுமே அவரைப் பார்த்​தேன். அதன் பின், அந்​தக் குற்​றம் நடந்த நாள்​வரை சந்​திக்​கவே இல்​லை. தயவுசெய்து தவறான கதைகளைப் பரப்ப வேண்​டாம். இந்தத்தீர்ப்பு பலருக்கு ஆச்​சரிய​மாக இருக்​கலாம். ஆனால் எனக்கு இல்​லை. 2020-ம் ஆண்​டின் தொடக்​கத்​திலேயே, ஏதோ சரியில்லை என்று உணரத் தொடங்​கினேன். ஒரு குறிப்​பிட்ட குற்றவாளி​யின் விஷ​யத்​தில், வழக்கு கையாளப்​பட்​ட​தில் ஏற்​பட்ட மாற்​றங்​களை அரசுத் தரப்​பும் கவனித்​தது.

இந்த வழக்​கில் மிக முக்​கிய​மான ஆதா​ர​மான மெமரி கார்​டு, நீதி​மன்​றக் காவலில் இருந்​த​போதே 3 முறை சட்​ட​விரோத​மாக அணுகப்​பட்​டது கண்​டறியப்​பட்​டது. நீதி​மன்​றச் சூழல் அரசுத் தரப்புக்கு விரோத​மாகி​விட்​டது என்று தெளி​வாகக் கூறி, இரண்டு அரசு வழக்​கறிஞர்​கள் இந்த வழக்​கி​லிருந்து வில​கினர்.

இடைப்​பட்ட இந்​தக் காலங்​களில், நான் உயர் நீதி​மன்​றத்​தை​யும் உச்​சநீ​தி​மன்​றத்​தை​யும் அணுகி இந்த நீதி​மன்​றத்​தின் மீது நம்பிக்கை​யில்லை என்​ப​தைக் கூறினேன். இந்த வழக்கை அதே நீதிபதியிட​மிருந்து மாற்ற வேண்​டும் என்​கிற ஒவ்​வொரு கோரிக்கைகளும் நிராகரிக்​கப்​பட்​டன. இந்த நாட்​டில் சட்​டத்​துக்கு முன் அனை​வரும் சமமாக நடத்​தப்​படு​வ​தில்​லை.

இந்​தப் பயணத்​தில் என்​னுடன் துணை நின்​றவர்​கள் அனை​வருக்​கும் நன்​றி. பணத்​தைப் பெற்​றுக்​கொண்​டு, என் ​மேல் அவதூறுகளைப் பொழிந்​து, கதை கட்​டிய​வர்​கள் மேலும் பணத்தை வாங்​கிக்​கொண்டு அதைத் தொடர்ந்​து செய்​ய​லாம்​” எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT