ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து சூப்பர் ஹிட்டான மலையாளப் படம் த்ரிஷ்யம். க்ரைம் த்ரில்லர் படமான இதன் இரண்டு பாகங்களும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இது ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம், ‘த்ரிஷ்யம் 4-ம் பாகம் உருவாக வாய்ப் பிருக்கிறதா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு, “த்ரிஷ்யம் கதையை இதற்கு மேல் கொண்டு சென்றால் சுவாரஸ்யம் இருக்காது. அதனால், 3-ம் பாகத்துடன் இது நிறைவடைகிறது. கதையை நீட்டிக்கும் விருப்பமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.