தென்னிந்திய சினிமா

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? - சர்ச்சை கருத்தால் அவதூறு வழக்​கு தொடர முடிவு

ப்ரியா

பிரபல தெலுங்கு நடிக​ரான அல்லு அர்ஜுன், புஷ்பா படங்கள் மூலம் பான் இந்​தியா நடிக​ராக மாறியிருக்கிறார். விளம்பர படங்​களி​லும் நடித்து வருகிறார்.

இந்​நிலை​யில் ராயல் என்ஃபீல்ட் நிறு​வனத்​தின் பிராண்ட் உத்தி குழு​வில் பணி​யாற்றி இருக்​கும் காவேரி பருவா என்பவர், விளம்பரங்​களுக்​காக அல்லு அர்​ஜுனை சந்திக்க வேண்​டும் என்றால் அதற்கு முன் “அவர் கண்களை நேரடி​யாகப் பார்க்​கக் கூடாது, கைகுலுக்​கக் கூடாது, அனு​ம​தி​யின்றி பேசக் கூடாது, இடை​யில் நகரக் கூடாது” என்​பது உள்பட 42 கடுமை​யான விதி​கள் உள்ளன என்று கூறி​யிருந்​தார். இது சர்ச்​சை​யானது.

          

இதையடுத்து சமூக வலை​தளங்​களில் அல்லு அர்​ஜுனை சரமாரி​யாக ட்ரோல் செய்ய தொடங்​கினர். இந்​நிலை​யில், அல்லு அர்ஜுன் மீது கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் அனைத்தும் ஆதா​ரமற்​றவை மற்​றும் உண்​மைக்​குப் புறம்பானவை என்று அவர் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் தரப்பில் வெளி​யிட்​டுள்ள அறிக்கையில், “அல்லு அர்​ஜுன் எப்​போதும் மரி​யாதை​யுட​னும் கண்ணியத்​துட​னும் நடந்து கொள்​பவர். இது​போன்​ற பொய்​யான குற்​றச்​சாட்​டு​களைத் தீவிர​மாக எடுத்​துக் கொள்​கிறோம். இதற்​குக் காரண​மானவர்​கள் மீது அவதூறு வழக்​குத் தொடர எங்​கள் சட்​டக் குழு தயா​ராக உள்​ளது” என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT