நடிகை ஸ்வேதா மேனன்

 
தென்னிந்திய சினிமா

‘அம்​மா’​வில் இருந்து விலகியது ஏன்? - ஸ்வேதா மேனன் விளக்கம்

நிலா

மலை​யாள நடிகர் சங்​க​மான ‘அம்​மா’​வின் பொதுக் ​குழுக் கூட்டத்தில் ஏற்​பட்ட பிரச்​சினையை அடுத்​து, அதன் தலை​வர் ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்​வாகி​களும் ராஜி​னாமா செய்தனர்.

இது மலை​யாள திரைத்​துறை​யில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் ராஜி​னாமா செய்​தது ஏன் என்​பது குறித்து சமூக வலைதளப் ​பக்​கத்​தில் ஸ்வேதா மேனன் கூறி​யுள்​ளார். அதில், “பெரும்​பாலான உறுப்​பினர்​களின் ஆதர​வுடன் வெற்றி பெற்​றேன். என்​னால் முடிந்த அளவுக்கு நேர்​மை​யாகச் செயல்​பட்​டேன்.

முந்​தைய நிர்​வாகக் குழு​வின் செயல்​பாடு​களை விசா​ரிக்​கும் வாய்ப்பு எங்​களுக்கு வழங்​கப்​பட​வில்​லை. கடந்த 2 நிர்வாகங்களின் கணக்​கு​களும் முழு​மை​யாக ஆய்வு செய்​யப்பட வேண்டும். நான் எந்த அரசி​யல் கட்​சி​யை​யும் சேர்ந்​தவள் அல்ல.

தனிப்​பட்ட தாக்​குதல்​களைத் தொடர்ந்து சந்​தித்​த​தால், கொள்கை உறு​தி​யுள்ள பெண்​ணாக ‘அம்​மா’​வில் இருந்து விலக முடிவு செய்தேன். அது பலவீனத்​தால் அல்ல; என் சுய மரியாதையால் தான்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT