நடிகை ஸ்வேதா மேனன்

 
தென்னிந்திய சினிமா

‘அம்​மா’ அமைப்​பில் இருந்து என்னை வெளியேற்ற சதி நடந்தது: ராஜி​னாமா செய்த ஸ்வேதா மேனன் குற்றச்சாட்டு

நிலா

மலை​யாள நடிகர்​கள் சங்க (அம்​மா) நிர்​வாகி​கள் தேர்​தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை​பெற்​றது. இதில் தலை​வ​ராக நடிகை ஸ்வேதா மேனன், பொதுச் செய​லா​ள​ராக நடிகை குக்கு பரமேஸ்வரன், துணைத் தலை​வ​ராக லட்​சுமி பிரி​யா, இணைச் செயலாளராக அன்​சிபா ஹாசன் உள்பட 17 நிர்​வாகி​கள் தேர்ந்தெடுக்கப்பட்​டனர்.

மலை​யாள நடிகர்​கள் சங்​கத்​துக்கு ஒரு பெண் தலை​வ​ரானது இதுவே முதல் முறை. இந்​நிலை​யில் கடந்த சில மாதங்​களுக்கு முன் தன்னை நடிகர் டினி டோம், ஜிகாதி என்று அழைத்​த​தாக அன்​சிபா ஹசன் கூறியது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்பாக லட்​சுமி பிரியா மீதும், டினி டோம் மீதும் அவர் கொச்சி போலீ​ஸில் புகார் செய்​தார்.

இந்​தப் பிரச்​சினைக்கு இடை​யில் நடிகர்​கள் சங்க பொதுக்​குழு கூட்​டம் கொச்​சி​யில் நடை​பெற்​றது. முன்​னாள் தலை​வ​ரான மோகன்​லால் பொதுக்​குழு கூட்​டத்தை தொடங்கி வைத்​தார். பொதுச்​செய​லா​ளர் குக்கு பரமேஸ்​வரன் வரவு- செலவு கணக்கை தாக்​கல் செய்​தார். ஆனால் அந்​தக் கணக்கை அங்​கீகரிக்க முடியாது என்று கூறி நடிகர்​கள் சித்​திக், பாபு​ராஜ், இடைவேளை பாபு ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் கடும் வாக்​கு​வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தலை​வர் ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்வாகிகளும் ராஜி​னாமா செய்​வ​தாக அறி​வித்​தனர். ஸ்வேதா மேனன் தனது அடிப்​படை உறுப்​பினர் பதவியை​யும் ராஜி​னாமா செய்​தார். தொடர்ந்து நடிகர்​கள் சங்​கத்தை நிர்​வகிக்க தற்​காலிக கமிட்டி அமைக்க தீர்​மானிக்​கப்​பட்​டது.

பின்​னர் ரமேஷ் பிஷாரடி எம்​.எல்.ஏ தலை​மை​யில் தற்​காலிக கமிட்டி அமைக்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்த நிர்​வாகக் குழு​வும் தங்களின் பதவி​களை ராஜி​னாமா செய்​திருப்​பது மலை​யாளத் திரை​யுல​கில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. பின்​னர் செய்தியாளர்​களைச் சந்​தித்த ஸ்வேதா மேனன், சங்​கம் தவறான நபர்​களின் கைகளுக்​குச் செல்​வ​தாகக் குற்​றம்சாட்​டி​னார்.

அவர் கூறும்​போது, ”முன்​கூட்​டியே சில உள்​நோக்​கங்​களு​டன் என்னை இந்த அமைப்​பில் இருந்து வெளி​யேற்​றச் சதி நடந்​தது. பதவியைத் தக்க வைத்​துக் கொள்​வதற்​காக சிலரின் கைப்பாவையாக இருக்க எனக்கு விருப்​பமில்​லை. எனது மனதில் உள்​ளதை வெளிப்​படை​யாகப் பேசும் ஆளுமை எனக்கு இருக்கிறது. இந்​தச் சங்​கம் தற்​போது குற்​றச்​சாட்டுகளுக்கு உள்ளானவர்​களின் கைகளுக்​குச் சென்று கொண்​டிருக்​கிறது.

சங்​கத்​தின் தற்​போதைய நெருக்​கடிக்​கு, நிர்​வாகக் குழு​வின் பொருளாளர் உன்னி சிவ​பால் எந்​தத் தகவலும் தெரிவிக்​காமல் தலைமறை​வானதே காரணம். கடந்த மே 1ம் தேதி, எந்த முன்​னறி​விப்போ அல்​லது தகவலோ இன்றி அவர் காணா​மல் போனது பெரும் சிக்​கல்​களை உரு​வாக்​கியது. முந்​தைய நிர்​வாகக் கமிட்டியில் பாபு ​ராஜ் செய்த பல காரி​யங்​களில் பெரும் குளறுபடிகள் உள்​ளன. பெண்​களின் தலை​மைக்​குச் சவால் விடும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. இது​போன்ற ஆதிக்க மனப்​ பான்மையுடனான அமைப்​பில் தொடர்​வ​தில் அர்த்​தமில்​லை” என்றார்.

SCROLL FOR NEXT