நடிகை பார்​வதி

 
தென்னிந்திய சினிமா

‘அம்​மா’வில் மீண்​டும் இணையப் போவதில்லை: பார்​வதி முடிவு

நிலா

மலை​யாள நடிகர் சங்​க​மான ‘அம்​மா’​வில் மீண்​டும் இணை​யப் போவ​தில்லை என்று நடிகை பார்​வதி தெரி​வித்​துள்​ளார்.

நடிகை ஒரு​வர் பாலியல் துன்புறுத்​தலுக்கு ஆளான சம்பவம் மலை​யாள திரை​யுலகில் பரபரப்பை ஏற்​படுத்​தியதை அடுத்து மலையாள சங்​க​மான ‘அம்​மா’​வில் இருந்து வில​கிய சில நடிகைகள் ‘டபிள்​யூசிசி’ என்ற அமைப்பை உரு​வாக்​கினர். அதில் நடிகை பார்​வ​தி​யும் இணைந்​திருந்​தார்.

இந்​நிலை​யில் ‘அம்​மா’ அமைப்​பின் தலை​வ​ராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்​யப்​பட்​டார். சில மாதங்​களுக்கு முன் அந்த அமைப்​பில் ஏற்​பட்ட பிரச்​சினை காரண​மாக நிர்​வாகி​கள் பலர் ராஜி​மானா செய்​தனர். இதனால் அங்கு குழப்​ப​மான சூழல் நிலவுகிறது. இந்​நிலை​யில் பார்​வதி அளித்​துள்ள பேட்​டி​யில் ‘அம்மா’​வில் மீண்​டும் இணை​யப் போவ​தில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “இப்​போது ‘அம்​மா’அமைப்​பைத் தீவிரமாக யாரும் எடுத்​துக் கொள்​வ​தாகத் தெரிய​வில்​லை. அந்த அமைப்​புக்​கென நாங்​கள் சில கட்​டமைப்​பு​களை உருவாக்கியிருந்​தோம்; அதில் சில உயரிய விஷ​யங்​களை நிலைநிறுத்தி இருந்​தோம். அதாவது, ஒரு பெரிய குடும்​பம், அனைவரை​யும் காக்​கும் ஒரு ‘பிக் பிரதர்’ பிம்​பம் அதில் இருந்​தது.

ஆனால், உண்​மை​யில் நிலைமை அப்​படி இல்லை என்​பது ஏற்கெனவே நிரூபண​மாகி​விட்​டது. ‘அம்​மா’​வின் புதிய நிர்​வாகம் பற்றி கேட்​கிறார்​கள். 25 ஆண்​டு​களாக அந்​தப் பதவி​யில் இருந்தவர்​களுக்கு நல்ல அனுபவம் இருக்​கும். ஒரு புதிய நபருக்கு வெறும் ஆறு மாத காலம் மட்​டுமே அவகாசம் கொடுத்​து​விட்​டு, அவர்​களிடம் திறமை இல்லை என்று சொல்​வ​தில் என்ன அர்த்​தம் இருக்​கிறது?

இப்​போது என் கவனம் முழு​வதும் நடிப்​பில் மட்​டுமே உள்​ளது. ‘அம்மா’ அனை​வரை​யும் மதிக்​கும், பாது​காப்​பான, ஆதர​வான இடம் என்று எனக்​குத் தோன்​ற​வில்​லை. ஒரு அமைப்​பில் இல்லாமலேயே நான் பாது​காப்​பாக உணர்​கிறேன். அதனால் இப்போது எனக்கு எந்த அமைப்​பும் தேவை​யில்​லை” என்று தெரிவித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT